Skip to main content

பாரதிதாசர்க்கு இரங்கற்பா akaramuthala.in bharathidasan spl.issue


பாரதிதாசர்க்கு இரங்கற்பா

bharathidasan07
ஒப்பில் புலவர் உயர்வில் கலைஞர்
இப்புவி கண்ட எதிரிலா வலத்தினர்
தமிழ்த்தாய் புதல்வர் தனித்தமிழ்க் காவலர்
தாழ்த்தாத் தலையர் தளரா நெஞ்சினர்
பாரதி தாசர் பான்மை பலப்பல
பாரும் அறியும் ஊரும் உணரும்
இத்தகு சிறப்பில் ஏமமுறு கவிஞர்
கத்தவே எம்மைப் பிரிந்தது என்கொல்?
தமிழர் உணர்வறைப் போயது கண்டோ?
தமிழ்மொழி தமிழகத்தில் தளர்வற உணர்ந்தோ?
இந்திக் கிங்கே இடம் வரக் கண்டோ?
எதனால் புத்தேன் உலகம் புக்கார்?
எல்லாம் தெள்ளிதின் உணரும்
இறையே எமக்குச் செய்க உரையே.
- க.தி.நாகராசன்
- குறள்நெறி: வைகாசி 2, 1995 / மே 15. 1964
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue