Skip to main content

எவரிடம் காண்பது …. – கவிஞர் இளங்கம்பன் akaramuthala bhrathidasan spl.issue

எவரிடம் காண்பது …. – கவிஞர் இளங்கம்பன்

bharathidasan04
அருந்தமிழ்த் தாயுவக்க
அளப்பரும் பணி பரிந்தோய்!
பெரும்பகை முகில் கிழித்து பேரொளி தந்த வீர!
இருபதாம் நூற்றாண்டிற்கோர்
இணையிலாக் கவிஞரேறே!
அருவிபோல் எமக்(கு) இனித்த
அரசே நீ மறைந்தாயாமே!
குன்றுபோல் நிற்குமுன்றன்
கோலத்தை; மாற்றறார் சூழ்ச்சி
ஒன்றுக்கும் ஆட்படாத
உறுதியை, புரட்சிப் போக்கை,
கன்றுக்குத் தாய்போல், கன்னிக்
கவிஞர்பால் குழையும் மாண்பை
என்றினிக் காண்பதையா!
எவரிடம் காண்பதையா?
- குறள்நெறி: சித்திரை 19. தி.பி.1995 / மே 1, கி.பி.1964
 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue