பிறமொழி கலந்து பேசக் கூசு ! – கவிஞர் இரா .இரவி !

பிறமொழி கலந்து பேசக் கூசு ! – கவிஞர் இரா .இரவி !


thamizh-01
இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் !
ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் !
திருக்குறளால் பெருமை பெற்ற மொழி தமிழ் !
திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் !
எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ் !
எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் !
உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக !
உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக !
உலகம் முழுவதும் ஒலிக்கும் நம் தமிழ் !
உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் தமிழ் !
இலக்கியங்களின் இமயம் நம் தமிழ் !
இலக்கணங்களின் இருப்பிடம் நம் தமிழ் !
எழுத்திலும் பேச்சிலும் நிலைத்த ஒரே செம்மொழி !
இனிமையான செம்மொழி சிதைப்பதை நிறுத்துக !
தமிழா தமிழை, தமிழாகப் பேசு !
தமிழா தமிழை, தமிழாக எழுது !
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு !
ஒப்பற்ற தமிழுக்கு, பிறமொழி நஞ்சு !
என்ன வளம் இல்லை தமிழ் மொழியில் !
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் !
ஆங்கிலச் சொற்கள் கலப்பது மடமை !
ஆங்கிலக் கலப்பின்றி பேசுவது கடமை !
தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு !
தமிழில் பிறமொழி கலவாமல் பேசு !
பிறமொழி எழுத்தும் , சொல்லும் !
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்!

Comments

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue