தமிழே! – கவிஞர் தே.ப.பெருமாள்


தமிழே! – கவிஞர் தே.ப.பெருமாள்

Thamizhannai02
நிறைவினில் மலர்ந்தொளிரும் தமிழே – என்
நெஞ்சத்தில் அமுதாகும் தமிழே!
உறவினில் உயிரான தமிழே –  என்
உணர்வினில் கவிபேசும் தமிழே!
ஒழுக்கத்தின் மணம்வீசும் தமிழே –  வீர
உருவத்தில் கூத்தாடும் தமிழே!
விழுப்பத்தின் நலமுரைக்கும் தமிழே –  நீதி
மேவியே கோலோச்சும் தமிழே!
நிலவின் குளிர்பெற்ற தமிழே –  கதிர்
நிரப்பும் ஒளிபெற்ற தமிழே!
மலரின் மெதுவேற்ற தமிழே –  தேன்
வழங்கும் சுவை கொண்ட தமிழே!
மின்னின் விசைகொண்ட தமிழே –  கடல்
விரிக்கும் திரைமுழக்கத் தமிழே!
கன்னி நிறைபொலியுந் தமிழே –  எங்கள்
கவிஞர் நிதியான தமிழே!
சங்கப் புலவர்களின் தமிழே –  வையம்
தழைக்கக் குறள் தந்த தமிழே!
துங்க மணிச்சிலம்பின் தமிழே –  கம்பன்
சோதி மகுடமொளிர் தமிழே!
நான்பேச மெய்குளிரும் தமிழே –  என்
நாவெல்லாம் தித்திக்கும் தமிழே!
வான்தேசு கொட்டுகின்ற தமிழே –  தென்றல்
வாசம் அளைந்துவருந் தமிழே!
அன்புக்கு வித்தூன்றும் தமிழே –  தெய்வ
அருளுக்கு வழிகாட்டுந் தமிழே!
துன்பமாம் முகிலொழிக்கும் தமிழே –  வாழ்வைச்
சுவையாக்கும் தெய்வீகத் தமிழே!
அகிலமெல்லாம் ஒன்றென்னும் தமிழே –  வாழ்வில்
அனைவர் நலம் விழைகின்ற தமிழே!
பகையொழித்தே யமைதிதரும் தமிழே –  இந்தப்
பாரெல்லாம் போற்றுகின்ற தமிழே!
- குறள்நெறி: மாசி 3, தி.ஆ.1995,  பிப்.15, கி.ஆ

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue