Posts

Showing posts from March, 2014

திருக்குறளில் உருவகம் 3 – வீ.ஒப்பிலி

Image
திருக்குறளில் உருவகம் 3 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி இலக்குவனார் திருவள்ளுவன்      30 மார்ச்சு 2014       கருத்திற்காக.. (23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)   இவ்வாறு முட்களும், அடிமரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியும் துன்பத்தில் உருவாகின்றன. மரத்தை வெட்டுதலும், வீழ்த்துதலும் அழிவின் சின்னமாகின்றன. இவ்வாறே பிணக்கினால் வாடிய காதலி வாடிய கொடியாகிறாள்; அவளது ஊடலை நீக்காது, கூடாது செல்லும் காதலன் அக்கொடியை அறுக்கும் கொடியவனாகிறான். முள் மரம் இளையதாக இருக்கையிலே அழிக்கப்பட வேண்டும்; ஆனால் பழம் பெரும் அடிமரமும், வாடிய கொடியும் காக்கப்பட வேண்டும். பெருங்குடி காப்பவன் முதலில் இல்லாளின் வாட்டத்தை நீக்கிக் காப்பவனாக இருக்க வேண்டுமல்லவா?   கயவரை எண்ணிய திருவள்ளுவர் கரும்பை எண்ணியது வியப்பே! கரும்பின் இனிமையை எளிதில் நுகர முடிவதில்லை; அதை நெருக்கிப் பிழிந்தால்தான், பயன் விளைவிக்கும், இவ்வினிய பொருளின் தன்மை கயவர்க்கு உருவகமாக அமைகிறது. கடிந்து நடத்தினால்தான் அவர்கள் பயன்படுவர். மூங்கில் பெண்ணில் தோளிற்கு உருவகமாகிறது. தினையும் பனையும் சிறிதும் பெரிதுமான

வள்ளுவரும் அரசியலும் 3 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,

Image
வள்ளுவரும் அரசியலும் 3 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ., இலக்குவனார் திருவள்ளுவன்      30 மார்ச்சு 2014       கருத்திற்காக.. (23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) அரசு அமைப்பும் இயல்பும்:   வள்ளுவர் அரசின் உருவத்தைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. அதன் உட்பொருளைப் பற்றியே எண்ணலானார். அரச அமைப்பைவிட ஆட்சி நலத்தையே ஆய்கின்றார். ஏனெனில் எந்த உருவத்தில் அரசிருந்தாலும் மக்கள் பொருளாதார வாழ்வு சிறப்பதற்கு, அந்த அரசின்பால் சிற்சில தகுதிகள் இருக்க வேண்டும். அத்தகுதிகள் இருக்குமானால் மக்களுக்கு இறுதியாக வேண்டும் இன்பவாழ்வு வந்தெய்தும் என்பதே அவர் கோட்பாடாக இருந்தது எனக் கொள்ள வேண்டியிருக்கிறது.   எந்த அரசியல் அமைப்பாயினும் என்ன, ஆட்சி ஆதிக்கம் ஒரு தலைவன் கையில் இறுதியாகத் திரளும் வகையில்தானே இருக்கிறது. எனவே அவனை நல்லாட்சிக்கு ஏற்றவனாய் எவ்வாறு அமைப்பது? இதுவே வள்ளுவர் கவலை. அலக்சாண்டர் போப் என்ற ஆங்கிலக் கவிஞர் பாடுவார்: ‘‘அரசியல் உருவகம்பற்றி அறிவிலார் இகலட்டும் நல்லாட்சி வழங்கும் அரசியலே நல்ல அமைப்பாகும்’’ For form of Government let fools contest That which is

தமிழுக்குத் தலைவணங்கிய மலையாளம்..! – கவிமணி

Image
தமிழுக்குத் தலைவணங்கிய மலையாளம்..! – கவிமணி இலக்குவனார் திருவள்ளுவன்      30 மார்ச்சு 2014       கருத்திற்காக..    எழுத்தாளனின் எழுத்துகளே வருங்கால மன்பதைக் கட்டமைப்பைத் தீர்மானிக்கின்றன. தரமான முற்போக்கான எழுத்துகள் மூலம் இந்த மன்பதையைச் சமன் செய்வது நல்ல எழுத்தளார்கள் கையில்தான் இருக்கிறது. இலக்கிய எழுத்தாளர் என்றால் பெரும் படிப்பறிவும் தொழில்நுட்ப அறிவும் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இந்த மன்பதையைப்படித்து , அதனைத் திருத்தும் வகையில் எழுதும் இரண்டு கட்டுரைகள் போதும் ஒருவன் எழுத்தாளனாக ஏற்கப்படுவதற்கு!   ஆனால் , இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் பெரும்பாலான எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால் , கேரள மாநிலத்தைப் பொருத்தவரை , எழுத்தாளுமை உள்ள எழுத்தாளர்கள் மதிக்கப்படுகிறார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் மலையான எழுத்தாளர் இராசு பாதாளம்.   இவர் தமிழ்மண்ணின் மைந்தர் என்பது நமக்குப் பெருமை. சிறு அகவையிலேயே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்குச் சென்றிருந்தாலும் , இன்றும் தமிழுக்குத் தலைவணங்கும் மனிதனாக இருக்கிறார்.   இதோ தின இதழ் அலுவலகத்தைத் தேடி வந்த