அகரமுதல - கவிதை - கொரண்டிப்பூ :இளையவன் செயா


கொரண்டிப் பூ!

  இளையவன் – செயா  மதுரை
பெரியார் ஆண்டு 135 தொ.ஆ.2878  தி.ஆ. 2045
சுறவம் ( தை ) 16            29–01–2014
korandipoo
ஆழி   நீர்ப்பரப்பில்   ஆடுகின்ற  நிழலாய்
ஊழிப்   பெருவாழ்   விலுழன்று  உதட்டாலே
வாழி   வாழியெனும்  வாழ்த்துக்கு  வயமாகித்
தாழியள   வாய்த்தாங்கும்  துன்பச்   சுமைதனை
மறப்பதற்   கோர்நாள்   மல்லைநகர்  சென்றிந்தேன்kandhaiya01
பிறப்பதன்  பெரும்பயனை  பிற்றைநாள்   மக்களுக்கு
உரைப்பது  போன்றுருவச்  சிலைகள்  என்னுளத்துச்
சிறுகு   மறக்கப்   பெருந்துணை  ஆயிற்றே!
மல்லை   நகரின்  மாண்புறு  துறைஅன்று
சொல்ல  ரியபொருட்  களைச்சேர்த்  தனுப்பி
இல்லை  எமக்கீடென  எழிலுட  னிலங்கி
எல்லை  யிலாப்பெருமை   யினால்ஏற்றம்  பெற்றதே!
maamallapuram05கடல்  கடந்து  கலம்விட்ட  துறையின்று
மடல்    உதிர்ந்த   மலராக;    அழகு
உடல்   இளைத்த   உருவாகி    புகழுக்கு
இடர்ப்   பாடாயிருந்த  நிலையெண்ணியும்  வாழ்வில்
தொல்லையெனும் சுமையைத் தொகையாய்ச் சேர்த்திட்ட
கல்லொத்த   இதயத்தில்  கணநேரம்  நினைந்து
மல்லாந்து  படுத்தேன்   மணல்  வெளியில்
முள்ளாகிக்   குத்தியதே  முதுகில்   குறுமணல்!
கல்லெடுத்து   வந்தகவின்  மிகுவீர  மெலாம்அறிஞர்
சொல்லெடுத்  துப்பாராத  தால்மாறிற்றே – என்றும்மாறா
மல்லைக்    கடலின்   மாஅலை  யோசைமட்டும்
மெல்ல  என்செவியில்  மோதிற்றே!   அந்நேரம்
கலத்திற்கு  காட்டுகின்ற   கலங்கரை   விளக்கொளியில் maamallapuram04
உளத்திற்கு   ஊறுசெயும்   ஒருகாட்சி  கண்டேணுடல்
வளத்திற்கு   குறையிலா   வஞ்சி   யொருத்திசாவுக்
களத்திலே   வீழ்வதற்கு   கடுகி   வந்தாள்!
வந்தவள்   தானும்  வானோக்கி  – இம்மண்ணில்
தந்தவளைத்   “தாயே”யென   வாயா  லழைத்து
தந்த   வளைக்கையை   தானிறுக்கிக்  கட்டியவாறு
உந்திப்பா   யுந்தவளையென  உவரியிலே  கலந்திட்டாள்!
–இத்தனையும்
maamallapuram02நொடியில்   முடிந்திட்ட  நிகழ்ச்சிகண்டு  உலைக்கூட
அடிபட்ட  அனற்பிழம்  பாய்ஆன    நான்
துடித்திட்ட   நெஞ்சோ  டவள்துரை  பார்த்து
கடிதேகிக்   கரைசேர்த்  தேன்கடல்நீர்   கொண்டாளை!
சேர்த்தவளைச் செப்பனிட்டு  சிவந்தமுகம்  பார்த்திருந்தேன்
ஊர்த்தவளை  செய்கையினால்  உயிரிழக்கத்  துணிந்தாளோ;
வாய்த்தவனின்  கொடுமையால் வாரியேக  முனைந்தாளோ;
ஏய்த்தவனின் செயல்மறக்க  ஏகினாளோ  கடலுக்கு!
அறிந்தாக  வேண்டும்  அரிவைதெளிர்ச்சி  பெற்றாலென்றmaamallapuram01
எண்ண  அலைகள்  இதயத்தில்  எழும்போது
சுண்ண    நிறங்    கலந்தசுடர்    விழியாள்
கண்ணைத்  திறந்தாள்   கருங்குவளை   மலரனைய!
விண்ணைப் பார்த்தவிழி யாலென்னைப் பார்த்தாளப்பார்வை
“புன்னகையே  பெண்ணிற்கு  பூண்என்பதை  மறந்து
பொன்னையும்  பொருளையும்  போற்றுகின்ற  மண்ணில்
என்னை  யேன்கரை சேர்த்தீர்”  என்றதுவே!
சாவை   நாடுதற்குச்  சரியான காரணந்தான்
பாவையினை   நான்   கேட்டேன்    அவளும்
கோவைப்பழக்   கண்விழித்துப் “பூவையினை  சிலர்வெறும்
பூவாகக்   கருதுகின்ற   காரணத்தா  லென்றாள்!”
விளங்காத   சொல்கூறி   விழிநீரைச்  சிந்துகின்றாய்
இளங்காதல்  தோல்வி  தானுன்னைச்  சாவுக்
களங்   காணத்     தூண்டியதோ  வெனஎன்றன்
உளங்    கூறுகிற   தென்றேன்   சொன்னாள்!
“உப்புக்   கடலேகி   உயிர்துறக்க  வருவோர்மாட்டு
தப்புக்   கணக்கிட்டு    தாழ்நிலைகொண்ட  திவ்வுலகம்நீரும்
இப்புவியில்   வாழ்பவர்    தானே     வீணர்
செப்புகின்ற  மொழியில்  சிந்தை  குளிர்ந்திடுவீரே!
எந்தையும்  தாயும்  இருந்துமண  முடித்தபோது
வந்தவர்தம்   வாழ்த்துப்   பொருள்   மறந்து
பிந்தை    நிலையெல்லாம்  பெரிதும்  நினையாது
பதினாறும்  பெறாது   பாதியாய்   பெற்றிட்டார்!
maamallapuram05பெற்றிட்ட   பிள்ளைகளைப்  போற்றி    வளர்ப்பதற்கு
பெற்றிட்டார்  பெரும்  இன்னல்களைப்  பெற்றும்
வற்றிட்ட  செல்வத்தை  வளர்ப்பதற்   காசையுற்று
பெற்றியினை அழிக்கின்ற  பெருஞ்சூதைத் தேர்ந்தெடுத்தார்!
சூதினைத்  தேர்ந்தெடுத்  தார்தன்கணவர்  என்றசேதி
காதினை  அடைந்தபோது  கவன்றாள்  என்தாயும்
“வேண்டற்க   வென்றிடினும்   சூதினை   வென்றதூஉம்
தூண்டிற்பொன்  மீன்விழுங்கி  யற்று”  என்ற
மறை  நூலறிந்தும்   மயங்கிவீழ்ந்  தார்தந்தை
வரையள   வாய்பொருள்  வளர்க்க  எண்ணி
புரை   வாழ்விற்கு  இலக்கானார்; குடும்பமோ
உறைவதற்  குமுயிர்  தாங்குதற்கும்  வழியின்றி
விரைவாகச்  சென்றது  சாவொறக்கம்  தனைநோக்கி
மறைந்தது  போகவிருந்ததோ இருமலர்கள்  அதற்கும்
சிறந்த   தோர்வாழ்வு  சீராகயமைய  வேண்டுமென
குறையாத  ஆசையினைக்  குவித்திருந்தா  ளன்னை!
நிறைவான  செல்வத்  தாரொருவர் ஓர்நாளென்னை
பிறைவான  முகமுடைய பெண்னென  தன்மகனுக்கு
விரைவாக  மணமுடிக்க  வேண்டும்  என்றாராம்
தரமான  இடமிருந்து   தகுதி  சான்றோர்
பெண்பார்க்க வருகிறார்   களென்றசேதி  கேட்டநான்
புண்பட்ட  உடலில்பூ   நீர்தெளித்த  உணர்வடைந்தேன்!
பண்பட்ட  இடத்திலே  வாழப்போ   வதனைஎன்
கண்பட்ட  பேர்களிடம்   சொல்லிக்  களிப்புற்றேன்!
பெண்கொள்ள  வந்திருக்கும்  பெரியோர்  முன்பாக
மண்பார்த்து  நடந்துசென்று  வணங்கி  நின்றேன்
நின்ற  என்னை  நெடுநேரம்   பார்த்துவிட்டு
ஈன்றவளை  அருகழைத்து  இதமாகப்  பேசலுற்றார்!
மன்றல்  அமைக்கநாள்  பேசுகிறார்;  என்வாழ்வில்
தென்றலைத்   தீண்டுவோ  மெனநினைக்கும்  போதில்
சென்று  சேதியனுப்பு   கிறோமெனும்  சொற்கேட்டேன்
சென்றவரின்  சேதியினையும்  சின்னாளில்  பெற்றோமே!
வில்வளைத்துக்  கொல்லும்  விலங்கைப்  போல்
சொல்  புனைந்து  கொன்றுவிட்டார்  என்னை
தொல்பொருள்  ஆய்வு  செய்வார்  போல்என்
தோலின்   வெண்தழும்  பைப்பெரு நோயென்றே
விளம்பி   விட்டார்   மடலினிலே;  உடலில்
துலங்கிவிட்ட   தழும்போ  இம்மண்ணில்  நான்
இலங்கிய  நாள்தொட்டு   இருந்த தென்பதறியார்
கலங்கிய  கண்ணோ  டென்தாயும்  எனைப்பார்த்தாள்!
பெண்ணாக  எனைப்பெற்ற  பெருந்   தெய்வமே
பொன்னான  மணநாள்  வருமென்று  பூரித்தாய்
இந்நாளோ   இதயம்   புண்ணாகும்   சேதிகேட்டாய்
எந்நாக்கு  பெற்றார்  எடுத்தியம்பிய  சொல்லானாலும்
நுண்நோக்குத்  திறன்   பெறாக்   காலமம்மா!
காலத்தின்  கோலத்தினால்  கன்னியுன்  மகள்
கொடிப்   பூவல்ல  கொரண்டிப்  பூவெனக்கூறி
நொடிப்  பொழுதில்  என்முடிவை   நானே
முடி   வெடுத்து  முழங்குதிரை  தேடிவந்தேன்”!
சொல்லி  முடித்தாள்  என்னுடல்  சில்என்றுஆனது!
துள்ளி  எழுந்தேன்  துகிலெல்லாம்  நனைய
பள்ளி  கொண்ட   இடத்தின்   தடம்அழிய!
தடித்தஅலை  செய்தநிலை  உணர்ந்தேன் – ஆங்கே
கலையழகுக்  கன்னிக்கு  மாறாகக்  கடல்வெளியே!
கண்ட   தெல்லாம்   கனவென்றும்  இதுவரை
கடுமுறக்கம் கொண்டொ  மென்றும் கருதிக்கொண்டேன்!

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue