Posts

Showing posts from December, 2013

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Image
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் By Venkatesan Sr First Published : 23 December 2013 10:45 PM IST புகைப்படங்கள் பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன. பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம் என்கின்ற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். படிப்பு: தொடக்க கல்வியை சகோதரர் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டார். இயக்கம்: கம்யூனிச விவசாய சங்

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தேவநேயப் பாவாணர்

Image
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தேவநேயப் பாவாணர் By Venkatesan Sr First Published : 22 December 2013 11:23 AM IST புகைப்படங்கள்         தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராகவும், மொழிஞாயிறு என்னும் பட்டத்திற்குரியவராகவும், எவருக்கும் தலைவணங்காத தனித் தமிழ் அரிமா என்னும் பட்டத்திற்கு சொந்தகாரார்தான் தேவநோயப் பாவாணர். நெல்லை மாவட்டம் சங்கரநயினார் கோயிலை (சங்கரன்கோவில்) அடுத்து பெரும்புதூரில் 07.02.1902-ல் ஞானமுத்து, பரிபூரணம் தம்பத்தியினருக்கு பாவாணர் நான்காம் மகனாகவும் கடைசிப் பிள்ளையாகவும் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் "தேவநேசன்". 1906-ம் ஆண்டிலே பாவணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். இதையடுத்து தேவநேசன் சிறுபிள்ளையாதலால், தக்கார் ஒருவர் பொறுப்பில் வளர வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயம் அவருடய இரண்டாவது அக்காள் திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் தேவநேசனை வளர்க்கும் பொறுப்பைக் கனிவுடன் ஏற்றுக் கொண்டார். படிப்பு: திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் உதவியுடன் வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூ

அச்சம்

Image
அச்சம்                                                 கல்வியாளர் வெற்றிச்செழியன் paventharthamizhpalli@gmail.com அஞ்சி அஞ்சி ஒதுங்கிவிட்டால்             உதுவும் நடக்குமா ! அஞ்சி நாமும் முடங்கிவிட்டால்             உயிரும் நிலைக்குமா !   அச்சம் உள்ள நிலையினிலே             அமைதி கிடைக்குமா ! அஞ்சி வாழும் மக்களிடை             மகிழ்ச்சி தோன்றுமா !   அச்சம் பெற்ற மூளையிலே             அறிவு மலருமா ! அஞ்சி வாழும் அடிமையரின்             கொள்கை பிழைக்குமா ! அச்சம் கொண்ட உறவினிலே             உண்மை இருக்குமா ! அச்சம் உள்ள உயிர்களிடை             அன்பு தோன்றுமா ! அச்சம் வாழ்வில் இருக்கையிலே             கலைகள் முகிழுமா ! அச்சம் கொண்ட மனத்தவர்கள்             படைக்க முடியுமா ! அச்சம் கொண்டு பிழைகளையே             ஏற்று அமைவதா ! அச்சம் நம்மை ஆளவிட்டு             அடிமை ஆவதா ! அச்சம் நீங்க உண்மையெனும்             ஒளியை ஏற்றுவோம் ! அஞ்சாமல் விடுதலையாய்             வாழ்ந்து காட்டுவோம் ! அகரமுதல

தமிழைப் போற்ற வாருங்கள்!

Image
தமிழைப் போற்ற வாருங்கள்! - இளவல் அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! தமிழைப் படிப்போம் வாருங்கள்! தமிழைப் போற்ற வாருங்கள்! - அகரமுதல இணைய இதழ்

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேரறிஞர் அண்ணா

Image
நன்று. மக்கள் அழைப்பதுபோல் அண்ணா என்றே குறிப்பிட்டிருக்கலாம். தமிழறிஞர் தலைப்பில் வருவதால் பேரறிஞர் அண்ணாவின் படைப்புச்சிறப்புகளை மேலும் சேர்த்திருக்கலாம். எழுத்துநடை சார்ந்த மொழிபெயர்ப்பு  மூலம் போல் அமைவது கடினம். எனினும், < No Sentence can begin with because, because, because is a conjunction  >  என்பதை  மூலத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில்,   "எந்தத் தொடரின் தொடக்கத்திலும் அமையாத சொல், 'ஏனென்றால்'; ஏனென்றால்,   'ஏனென்றால்' என்பது இணைப்புச் சொல் "  எனக் குறிப்பது சிறப்பாக அமையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக்  காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேரறிஞர் அண்ணாதுரை By Venkatesan Sr, தினமணி First Published : 19 December 2013 03:11 PM IST       தமிழ். ஆங்கில, இந்தி என மும்மொழியிலும் முத்தாய்ப்பாக பேசுவதிலும், எழுதுவதிலும் முற்போக்கு சீர்திருத்த வாதியானவர்தான் காஞ்சிபுரம் தந்த தங்க தமிழன் பேரறிஞர் கா.ந. அண்ணாதுரை. மும்மொழி வித்தகரான

தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!

Image
கரிகாலன் மகனே! தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்! .. - திருக்குறள்பாவலன் தமிழ்மகிழ்நன் விழித்தவிழி இமையாமல் வீணர்கண் கண்டான்! வெங்களத்தில் மார்மீது விழுப்புண்கள் பெற்றான்! அழியாத புகழுடம்பு ஐயனவன் பெற்றான்! ஐயமின்றித் தமிழீழம் ஆளவுயிர் தந்தான்! பழிசுமந்த சிங்களரைப் பசும்மழலைக் கண்கள் பார்த்தபடி படமாகப் பாரெங்கும் கண்டார்! எழிலூறும் இருவிழியால் எரிதழலை யெழுப்பும் ஏந்தலவன் நினைவேந்தி இனியென்று மிருப்போம்! வெறித்தபிள்ளை விழிகளிலே வாழ்வச்சம் இல்லை வாழ்நாளில் இதுபோலே வையகமெங்கும் உண்டா? எறிந்தவேலை இமையாமல் எதிர்த்துவிழி நோக்கும் இணையில்லாக் கரிகாலன் இளையமக னிவனே! பறித்தவாழ்வை யார்தருவார்? பாவிகளே! பிள்ளை பெற்றவளின் வயிறெரியப் பச்சை மண்ணைச் சுட்டீர்! முறித்தீர்கள் மூர்க்கர்காள்! முருங்கையிளஞ் செடியை! முனைமுகத்தில் கரிகாலன் முறைசெய்து ஒறுப்பான்! ஓடிநின்று ஒளியவில்லை; உளறவில்லை வெறியால் உன்மத்தம் பிடித்தவரை ஒளிர்விழியால் எரித்தான்! வாடிநின்று வாழ்வதனை வேண்டவில்லை யிளையோன்! விடுதலைக்கு வாளேந்தி வெற்றிதேடும் மரபோன்! பாடியாடிப் பனிமலராய்ப் பழகுமவன் உ

புதிது புதிதாய் சிந்தனை செய்

Image
புதிது புதிதாய் சிந்தனை செய்                                                                                                 -கல்வியாளர் வெற்றிச்செழியன் புதிது புதிதாய் சிந்தனை செய் – நீ உலகம் புதிதாய் எழுந்திட செய் – நம் உலகம் புதிதாய் எழுந்திட செய். புதிய தென்பது  பழையதன் வளர்ச்சி புவியில் நிகழ்ந்திடும் புதுமறு மலர்ச்சி விதையும் செடியும் இயற்கையின் சுழற்சி வினைவழி மாற்றும் மக்களின் முயற்சி                                                                                                 புதிது தனி ஒரு செயலே மாற்றமென்றில்லை தனி சிறு விசையின்றி மாற்றங்கள் இல்லை முழுவதும் திடுமென மாறு வதில்லை முயற்சிகள் இன்றி, மேல் ஏறுவதில்லை.                                                                                                 புதிது உள்ளது சிறத்தல் வளர்ச்சியின் முதற்படி உள்ளதை இழத்தல் அழிவின் அடிப்படை உள்ளத்தின் எண்ணமே முடிவுகள் செய்யும் உள்ளுவோம் உயர்வாய், உயர்வாய்ச்  செய்வோம்.                                                             

பூவுலகம் மகிழ்ச்சியின் எல்லை…..

Image
 -முனைவர். ப. பானுமதி .. கேவலம் மரணத்திடம் ஏன் அச்சம் கொள்ள வேண்டும் ? மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே. என்னை எதிர்கொண்டு நேரடியாகப் பரிட்சித்துப் பார்.   இவை உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க்கு மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள்  தலைமையாளர் திரு வாசுபாய் அவர்கள் எழுதிய கவிதை வரிகள். துன்பங்களும் துயரங்களுமே வாழ்க்கை என்றிருந்த நம் எழுச்சிக் கனல் பாரதியும் மரணப் படுக்கையில் இருந்த போது , “ காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் ; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் ! . . .               . . .                     . . .  ஆலாலமுண்ட வனடி சரணென்ற மார்க்கண்டன் – தன தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன் – இங்கு நாலாயிரம் காதம் விட்டகல்! உனைவிதிக்கிறேன் அரி நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன் ” என்று காலனை நாலாயிரம் காதம் அகலுமாறு விரட்டுவான். இன்றைய இளைஞர்கள் பாரதியைப் போல , வாசுபாயைப் போல மரணத்தை மிரட்டாமல் தொலைவில் விரட்டாமல் இவர்களே சென்று காலனைத் தழுவிக் கொள்கிறார்கள்.   இரு நாள் முன்னர் மாணவி ஒருவர்

வழி சொல்வீர்! – தங்கப்பா

Image
வழி சொல்வீர்! – தங்கப்பா . உப்பினிலே உப்பென்னும் சாரம் அற்றால்   உலர் மண்ணின் பயன்கூட அதனுக்கில்லை குப்பயைிலே கொட்டி அதை மிதித்துச்செல்வார்!   குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ? தமிழன்பால் தமிழின்றேல் அவனும் இல்லை   தலைநின்றும் இழிந்தமயிர் ஆவானன்றே! உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில்.   உணராமல் தமிழ்மறந்து கிடக்கின்றானே! பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப்   பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான்! மறவுணர்ச்சி முழுதழிந்தான்;  மானங்  கெட்டான்;   வன்பகையின் கால்கழுவிக் குடிக்கின்றானே! நெருப்பிருந்தால் சிறுபொறியும் மலைத்தீ யாகும்   நீறாகிப் போனபின்னர் ஊதி ஊதி . . . வெறுப்புத்தான் வருகுதையா! பயனும் இல்லை! விட்டிடவும் மனமில்லை! வழி சொல்வீரே! தரவு : பேரா. அறிவரசன் அகரமுதல

அயல்மொழி எதற்கடா தமிழா? - கவிக்கொண்டல்

Image
அயல்மொழி எதற்கடா தமிழா?         - கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில் அயல்மொழி எதற்கடா? – தமிழா அயல்மொழி எதற்கடா? முன்னைய மொழியாம் மூவா மொழியெனும் முத்தமிழ் நமதடா! – அது எத்துணைச் சிறந்ததடா! வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி ஆட்சிக்   கொரு மொழியா? -வழி பாட்டுக் கொரு  மொழியா? பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி பலமொழி எதற்கடா? – தமிழா பலமொழி எதற்கடா? தமிழில் பேசு தமிழில் எழுது தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத் தமிழில் வழிபடுவாய்! தமிழில் கல்வியைக் கற்பதே மேன்மை தமிழில் பெயர் சூட்டு – பிள்ளைக்குத் தமிழில் பெயர் சூட்டு! அம்மா அப்பா அத்தை மாமா அழகாய்ச் சொல்லிருக்க – தமிழா ஆங்கிலச் சொல் லெதற்கு? மம்மி டாடி ஆண்ட்டி அங்கிள் மழலைகள் அழைப்பதுவா? – தமிழ் மதிப்பை இழப்பதுவா? நன்றி : அகரமுதல

எந்நாளோ? – இறைக்குருவனார்

Image
எந்நாளோ? – இறைக்குருவனார்              கனலுகின்ற உள்ளக் கனவெல்லாம் நனவாகிப் புனலுறுபூம் பொய்கையெனப் பொலியுநாள் எந்நாளோ ? அந்தமிழாம் நந்தாயை அரியணையின் மேலிருத்தி வெந்திறல்சேர் பெருமையுடன் விளங்குநாள் எந்நாளோ ? கல்விக் கழகமெலாங் கவின்றமிழே கமழ்வித்துப் பல்கலையும் நந்தமிழர் பயிலுநாள் எந்நாளோ ? திருநெறியாஞ் செந்நெறியின் திறனெல்லாம் உலகறிந்தே அருமையுணர்ந் ததன்வழிவாழ்ந் தகமகிழ்தல்   எந்நாளோ ? அடிமைவிலங் கொடித்தே அரியணையில் நந்தமிழன் முடிபுனைந்து கொடியுயர்த்தி முழங்குநாள் எந்நாளோ ? கொத்தடிமை யாங்கறையைக் குருதிகொண்டும் நாங்கழுவி முத்தமிழின் சீர்மை முழங்குநாள் எந்நாளோ ? நாடும்இனமும் நன்மொழியும்   நந்தமிழர் பீடும் பெருமையுமாய்ப் பிறங்குவித்தல் எந்நாளோ ? உழைத்தும் பயன்காணா(து) உலைவுறு நெஞ்சினரெல்லாம் தழைத்துப் பலவளனும் தாம்பெறுதல்   எந்நாளோ ? சாதிகுலம் பிறப்பால் சழக்கிட்டு மாய்கின்ற தீதிரிந்தே நன்மை திகழுநாள் எந்நாளோ ? வாழ்வெல்லாம் பாட்டாகி வளங் கொழித்த   நந்தமிழர் பாழ்மொழிவேற் றிசைக்கடிமை பழிக்குநாள் எந்நாளோ ? திரைப்படமும் பிறகலைய