"சே''

"சே''

First Published : 06 October 2013 01:57 AM IST
தனியொரு எழுத்தும் தகுதியான பொருள் தரும் தன்மை தமிழுக்கே உரிய தனி அடையாளம்.
"சே' என்பது தனித்த ஓர் உயிர்மெய் எழுத்து. இந்த எழுத்தைச் "ச்சே' என உச்சரிக்கக்கூடாது. சேய்மை, சேவல், சேமிப்பு என்னும் சொற்களின் முதலெழுத்தை ஒலிப்பதைப்போல ஒலிக்க வேண்டும்.
"சே' எனும் ஓரெழுத்து மொழியானது, அழிஞ்சின் மரம், இடபராசி, உயர்வு, எருது, ஒலிக்குறிப்பு எனப் பல்வேறு பொருள் தருகிறது. இவற்றுள் "சே' என்னும் எழுத்துக்குரிய "எருது' உழவுத் தொழிலோடு தொடர்புடையது. உழவுத் தொழிலுக்கான அனைத்துப் பணிகளிலும் "எருது' முதன்மை பெற்றுள்ளது. உழவர்கள் தம் நிலங்களில் கலப்பைப் பூட்டி எருதின் துணையோடு ஏர் உழுவார்கள். உழும்போது கலப்பையின் கொழு, நிலத்தை நேரே கிழித்துக்கொண்டு செல்ல வேண்டும். சில வேளைகளில் எருதின் கவனக்குறைவால் அக்கம் பக்கம் கொழுமுனையின் போக்கு மாறும். அதைச் சரிசெய்யும் உழவன், எருதினைச் சரி செய்வான். எருதினை ஒழுங்குபடுத்த எருதுகளை நோக்கி ""சே'' ""சே'' ""சே'' என ஒலி கொடுப்பான். எருதுகள் புரிந்துகொள்ளும்; ஏர் நேர்படும். எனவேதான் எருதைக் குறிக்கும் "சே' என்னும் சொல்லை உழவன் ஒலிக்குறிப்பாக்கி மகிழ்கிறான்.
கருக்கொண்ட பசு கன்று ஈனும். பசு ஈன்றது ஆண் கன்றாக இருப்பின் "சே'ங்கன்று (சே+கன்று=சேங்கன்று) என்பார்கள். பெண் கன்றாக இருப்பின் "கெடேரி' என அழைப்பர். "சே' என்பது எருது; கன்று என்பது பசுவின் இளமைப் (தொல்) பெயர். சே - சேறு - சோறு என்று விரிந்தது தமிழ்மொழியின் வளர்ச்சி.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue