Posts

Showing posts from September, 2013

வள்ளலார் போட்ட பூட்டு!

Image
வள்ளலார் போட்ட பூட்டு! தமிழ்மணி By கா.மு. சிதம்பரம் First Published : 29 September 2013 02:30 AM IST புகைப்படங்கள் வள்ளலார் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகன் புருஷோத்தமன் தன் தந்தையிடம் கோபித்துக்கொண்டு மதுரை ஞானசம்பந்தர் சுவாமிகள் மடத்திற்குச் சென்றுவிட்டார். அந்த மடாதிபதிக்கு ராமலிங்க அடிகள் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த அங்கிருந்த புலவர்கள் சிலர், "இராமலிங்க அடிகளை பெரிய வித்துவான் என்று சொல்கிறார்கள்; ஆனால் கடிதம் பாமரத்தன்மையாக உள்ளது, அவருக்கு இலக்கணப் புலமை கிடையாது' என்று கூறினர். அதன்பொருட்டு இராமலிங்க அடிகள் மீண்டும் சன்னிதானத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். ஆனால் அந்தப் புலவர்களால் அக்கடிதத்தைப் படித்து புரிந்துகொள்ள இயலவில்லை. வள்ளலாரின் இலக்கண நுண்மான் நுழைபுலத்துக்கு இக்கடிதமே மிகச்சிறந்த சான்றாகத் திகழ்கிறது. இது "வள்ளலார் கடிதங்கள்' (பக்.100) என்ற நூலில் "இலக்கண நுண்மான் இயல்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. இதுவரை இதற்கு சரியான விளக்க உரை இல்லை என்பதால்,

காரைக்கால் அம்மையார்

Image
உலகின் சிறந்த கவிகளில் ஒருவர் - காரைக்கால் அம்மையார் க. நா. சுப்ரமணியன் Comment (1)   ·   print   ·   T+    தத்துவ தரிசனம் எந்தச் சமயத்தில் எப்படிக் கவிதையாகிறது என்பதை உலகத்திலுள்ள பலமொழிக் கவிகளிடமிருந்து நிதரிசனமாக விளக்க முடியும். வார்த்தை, ஓசை முதலியனவற்றிற்கும் அப்பால் கவிதைக்கு ஒரு ஆத்மா இருக்கிறது- அந்த ஆத்மாதான் கவிதையியே முக்கியமான அம்சம் என்று சொன்னால் சுலபமாகவே எல்லாருமே ஏற்றுக்கொண்டு விடுவார்கள். இந்தத் தத்துவ ஆத்மா இருக்கிறதே இது எல்லா மொழிக் கவிகளுக்கும் ஒன்றுதான். ஆங்கில ஷேக்ஸ்பியரும் சரி, இத்தாலிய டாண்டேயும் சரி, தமிழ்க் காரைக்காலம்மையாரும் சரி- எல்லாருமே ஒரு ஆத்ம மானஸரோவரிலிருந்துதான் தங்களுடைய கவிதைக் கங்கையைக் கொணருகிறார்கள். உலகத்திலுள்ள ஞானமெல்லாம் எப்படி ஷேக்ஸ்பியருக்கு வந்தது என்று அவர் கவிதையைப் படித்து ஆச்சரியப்பட்டுக் கேட்பவர்கள் உண்டு. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிற வகையில் ஷேக்ஸ்பியரேயல்ல என்றும், வேறு எல்லாம் தெரிந்த வசதியுள்ள ஒருவர் என்றும் சிலர் பதிலும் சொல்வதுண்டு. அதற்கு அவசியமேயில்லை. மன

மக்கள் கவிஞர் பாப்லோ நெரூதா!

Image
மக்கள் பாவலர் பாப்லோ நெரூத   பற்றிய அருமையான கட்டுரை. பூ. கொ. சரவணனுக்குப் பாராட்டு. பிறநாட்டுப் பாவலர்கள் பற்றிய   அறிமுகம் தமிழ் இந்துவில் தொடரட்டும்! தமிழ்ப்பாவலர்கள் பற்றியும் தமிழ் இந்துவிலும் ஆங்கில இந்துவிலும் படைப்புகள் பெருகட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/ மக்கள் கவிஞர் பாப்லோ நெரூதா! பூ. கொ. சரவணன் Comment   ·   print   ·   T+    பாப்லோ நெரூதாவின் நினைவு தினம் இன்று. காதல் கவிதைகளும், சமத்துவம் நிறைந்த உலகத்தையும் தன்னுடைய கவிதைகளில் வார்த்த பெருங்கவிஞர் இவர். சிலி நாட்டில் தோன்றிய நெரூதா எழுதியது ஸ்பானிய மொழியில். அப்பா ரயில்வே ஊழியர் இளம் வயதிலேயே அவர் தவறிவிட குடும்பத்தை காப்பான் பையன் என்று எதிர்பார்த்தார்கள். இவர் பிரெஞ்சு படித்துவிட்டு ஆசிரியர் ஆகலாம் என்று முயன்றார். ஆனால், மிஸ்ட்ரலின் பழக்கம் அவரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது. இவர் கவிதை எழுத வீட்டில் கடும் எதிர்ப்பு. செக் நாட்டைசேர்ந்த கவிஞரின் பெயரை புனைப்பெயராக்கி ந

போரைத் தடுத்த கவிதை!

Image
போரைத் தடுத்த கவிதை! By புலவர் கி. கிருட்டிணசாமி First Published : 15 September 2013 03:49 AM IST புகைப்படங்கள் அதிவீரராம பாண்டியன், நிடத நாட்டு மன்னன் நளனுடைய வரலாற்றை "நைடதம்' என்ற பெயரில் விருத்தப் பாக்களில் அதைப்படிக்க, அவைப் புலவர்கள், ""நைடதம் புலவர்க்கு ஒüடதம்'' என்று பாராட்டினர். கரிவலம்வந்த நல்லூரில் ஆட்சி செய்துவரும் தன் அண்ணனும் சிறந்த தமிழறிஞனும் கவிஞனுமான வரகுணராம பாண்டியனிடம் நைடதத்தைக் கொடுத்தனுப்பி, அக்காவியத்தைப் பற்றி அவன் கருத்தைக்கேட்டு வருமாறு அனுப்பினான்.  வரகுண பாண்டியனின் மனைவியும் சிறந்த தமிழறிவுள்ளவள். அவளிடம் தம்பியின் நூலைக்காட்டி, அவள் கருத்தைக் கேட்டான். அவள் அந்நூலைப் படித்துப் பார்த்து, ""உங்கள் தம்பி எழுதியுள்ள நைடதம், நளன் சுயம்வரத்தில் தமயந்தியை மணந்தது, தங்கள் நாடு சென்று இல்லற வாழ்வில் இன்பம் அடைந்தது வரை கவிஞர்கள் பாராட்டும் அளவிற்குப் பாடியுள்ளார். ஆனால், கலி தொடர்ந்த பின் கலிநீங்கும் வரை நளனும் தமயந்தியும் துயரமடைந்த அவலச் சுவையை, கவிதைகள

செந்தமிழ்ச் செம்மல் சி.இலக்குவனார் - நூற்குறிப்பு

போற்றுதலுக்கு உரிய மணிவாசகம் பதிப்பகம்   பார்புகழ் பெறுவதாக!   அறிஞர் முனைவர் ச.மெய்யப்பன்   அவர்களின் தமிழ்ப்பணிகளில் குறிப்பிடத்தகுந்தது அவரின்   மணிவாசகர் பதிப்பகம் மூலம் ஆற்றிய தமிழ் நூல்கள் வெளியீட்டுப் பணியாகும். இதனாலேயே ‘ பதிப்புச் செம்மல் ’ என   அறிஞர்களால்   பாராட்டப் பெறுகிறார். அவர் வழியில் தொடர்ந்து நல்ல நூல்களைப் பதிப்பித்தும் வெளியிட்டும் வரும் மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு நல்லோர் வாழ்த்து என்றும் உரித்தாகும்!   தந்தையார் எண்ணியதை முடித்து வரும் திருவாளர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும் அவருக்கு உறுதுணையாக விளங்கும் திருவாளர் இராம.குருமூர்த்தி அவர்களும் என்றென்றும் தமிழ்உலகின் போற்றுதலுக்கு உரியவர்களாகத் திகழ்கிறார்கள்.   அறிஞர் முனைவர் ச.மெய்யப்பன் அவர்கள் , தாம்   பெரிதும் போற்றிய தமிழ்ப்போராளி பேராசிரியர்சி.இலக்குவனார் குறித்துத் தம் ‘ தமிழியக்க வேர்கள் ’ என்னும்   நூலில் , ‘ படிக்கும் பருவத்திலேயே தொல்காப்பியத்தில் ஆழங்கால் பட்டவர் ’ என்றும் , ‘ எதையும் திட்பநுட்பத்துடன் விளக்கும் திறனாளர் ’ என்றும் ‘ எளிய நடையும்   புதிய நோக்கும   கொண்ட படைப