நீ... எந்தச் சாதி?

நீ... எந்தச் சாதி?

First Published : 07 April 2013 12:38 AM IST
கவிமணி எழுதிய கவிதைகளுள் "நிந்தாஸ்துதி'யும் ஒன்று. பாட்டுடைத் தலைவனைக் குறைகூறுவது போல் பாராட்டும் பண்பே "நிந்தாஸ்துதி' எனப்படும். தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானை,
  ""தந்தை மலையாளி, தாய்மாமன் மாட்டிடையன்
    வந்த ஒரு மச்சானும் வாணியனே -  சந்தமும்
   விண் முகத்தை எட்டும் அயில் வேலேந்து
   பன்னிருகைச் சண்முகத்திற்கு சாதி யெதுதான்?''

என்கிறார். அதாவது, முருகனின் தந்தை சிவன் கயிலை மலையில் வசிப்பதால் அவர் மலையாளி. தாய் மாமன் விஷ்ணு மாடு மேய்த்த கண்ணன் ஆகையால் அவர் மாட்டிடையன். திருமாலின் மகன் பிரம்மன் ஆகையால் அவர் "மச்சான்' ஆகிறார். அவர் கலைவாணியின் கணவர் ஆதலால் வாணியன். ஆகவே, முருகா! உன்னை எந்தச் சாதியில் சேர்ப்பது? என்று கவிமணி நகைச்சுவை உணர்வுடன் வியந்து கேட்கிறார்.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue