ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!

ஓவியத்தையும் பார்க்க உடன்படா நங்கை!







கணவன் மேல் உண்மையான அன்பில்லாதவளாகஇருக்கிற மனைவி, கணவன் எக்கேடு கெட்டாலும் நமக்கென்னவென்று பேசாமலிருப்பாள். நன்மாதோ, எந்தத் துன்பத்தைப் பொறுத்தாலும் கணவனுடைய தீயொழுக்கத்தை மட்டும் ஒருநாளும் பொறுக்கமாட்டாள்.
கணவனுடைய தீயொழுக்கத்தை வெளியிலும் சொல்லாமல், அவனையுஞ் சினவாமல், அல்லும் பகலும் ஓயாத வருத்தமும், துக்கமும், பொறாமையுங் கொண்டு தகுந்த உணவு உறக்கமில்லாமல், மனம் புண்ணாகி மடிவாளென்பது உறுதியே! ஓவியக்காரர் சுவரில் எழுதும் ஓவியங்களை வந்து பார்க்கும்படி ஒரு கணவன் தன் மனவியை அழைக்க, "அவள் ஆண் ஓவியமாயிருந்தால் நான் பார்க்க மாட்டேன்; பெண் ஓவியமாயிருந்தால் நீர் பார்க்க உடன்பட மாட்டேனென்று' மறுமொழி சொன்னாள்.
""ஓவியர்நீள் சுவரெழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியையா மழைத்திடஆண் சித்திரமேல் நான்பாரேன்;
பாவையர்தம் முருவெனில்நீர் பார்க்கமனம் பொறேனென்றாள்
காவிவிழி மங்கையிவள் கற்புவெற்பின் வற்புளதால்''
(நீதி நூல், கணவர்-மனைவியர் இயல்பு, பாடல்-19)
ஓவியத்திற்கூடப் பெண் வடிவத்தை ஆடவர்கள் பார்க்கக் கூடாதென்கிற மனவுறுதியுள்ள கற்பரசிகள், தம்முடைய கணவர்கள் பிற மாதர்களைக் கூடிச் செய்யும் ஒழுங்கின்மைகளை எப்படிப் பொறுப்பார்கள்? ஆகையால், விலைமகளிர் முதலிய மாதர்களை ஆடவர்கள் கனவிலும் நினைக்காமலிருப்பது மிகவும் நன்மை. காமத்தை விலக்கஞ்செய்து சொந்த மாதர்களையே மேலாக மதிப்பவர்களே ஆடவர்களுள் சிறந்தவர்கள்! அவர்களே நல்லவர்கள்.
(மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் "பெண்கல்வி பெண் மானம்' நூலிலிருந்து...)

Comments

  1. அருமை. ஆனால் ஆண்களால் அப்படி இருக்க முடியுமா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue