Posts

Showing posts from September, 2011

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 64. ஒப்புமை தானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  64. ஒப்புமை தானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது . இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 29/09/2011  உவமை கூறுங்கால் இரண்டுக்கும் (உவமைக்கும் பொருளுக்கும்) உள்ள பொதுப் பண்பை எடுத்துக் கூறியும் உவமிக்கலாம் ; எடுத்துக் கூறாதும் உவமிக்கலாம்.  பவளம் போன்ற சிவந்த வாய் என்று கூறும்போது பவளத்திற்கும் வாய்க்கும் உள்ள பொதுப்பண்பாம் சிவப்பு நிறம் எடுத்துக் கூறப்படுகின்றது.  அவ்வாறு இன்றி பவளவாய் என்றும் கூறலாம்.  ஒப்புமை என்ன என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம்.  இது சுட்டிக்கூறா உவமம் எனப்படும்.  உவமை கூறுங்கால் உலகத்தார் உள்ளங்கொண்டு மகிழுமாறு கூறுதல்வேண்டும். ஒப்புமை தானே என்று எதற்கும் எதனையும் கூறிவிடுதல் கூடாது.  மயில் தோகை போலும் கூந்தல் என்பது தான் பொருந்துமேயன்றி காக்கைச் சிறகன்ன கரு மயிர் என்பது பொருந்தாது.  ஒற்றுமைக்குப் பாலும் நீரும்போல் என்பதுதான் பொருந்துமேயன்றி காஃபியும் டிக்காசனும் என்பது பொருந்தாது.  இருளன்ன கருங்கூந்தல் என்பது பொருந்துமேயன்றி தார் அன்ன கூந்தல் என்பது பொரு

thamizhk katamaikal 99 : தமிழ்க்கடமைகள் 99. தமிழுக்கு என்னைத் தருவேன்

தமிழ்க்கடமைகள் 99. தமிழுக்கு என்னைத் தருவேன் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 29/09/2011  சுற்றி வளைந்திடும் எத்துயரத்தையும் சுட்டு முடித்து அதை எறிவனே சொத்து நலத்தினை முற்ற இழப்பினும் சொற்றமிழுக்கு என்னைத் தருவேனே - கவியரசு முடியரசனார் http://www.natpu.in/?p=16144

Ilakkuvanarin pataippumanikal 68 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 68. மெய்ப்பாட்டியல் ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  68. மெய்ப்பாட்டியல் ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 28/09/2011  இலக்கிய மாந்தர்கள் உள்ள உணர்ச்சியால் உந்தப்படுகின்றகாலை எவ்வாறு சொல்லோவியப் படுத்துதல் வேண்டும் என்பதற்கு மெய்ப்பாட்டியல் மிகவும் துணைபுரியும்.  இவ்வகையான ஆராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை என்றே கூறலாம்.  வடமொழியில் நடனம் பற்றிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன.  அவையும் தமிழ் நூல்களைப் பின்பற்றியனவேயாம்.  இலக்கியப் படைப்புக்கும் இலக்கிய ஆராய்ச்சிக்கும் உரியனவாகக் கூறப்பட்டுள்ள மெய்ப்பாடுகள் பற்றிய இவ்வியல் முழுதும் கிடைக்கப் பெற்றிலதோ என்று ஐயுற வேண்டியுள்ளது.  ஒவ்வொரு இயலிலும் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய விளக்கம் கூறிய பின்னர், வகை கூறத் தொடங்குவது ஆசிரியர் தனிச் சிறப்பு. இவ்வியலில் அவ்வாறு கூறப்பட்ட நூற்பா காணப்பெறவில்லை.  கரையானுக்கு இரையாகி விட்டது போலும். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 240) http://www.natpu.in/?p=16063

Ilakkuvanarin pataippumanikal 67 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 67. மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றிமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதே

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 67. மெய்ப்பாட்டாராய்ச்சி இயற்றிமிழ் இலக்கியங்களோடு தொடர்புடையதே இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 27/09/2011  “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு ; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றான் வெளிப்படுதல்.”  இவ்வாறு பேராசிரியர் கூறியுள்ளார்.  உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடு என்பது தான் “மெய்ப்பாடு” என்பதன் பொருள்.  புளியை உண்டால் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப முகம் சுளிக்கின்றது.  எதிர்பாராத விதமாக அருகில் அரவம்   இருக்கக் கண்டால் அஞ்சுகின்றோம்.  அவ் வச்சத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கேற்ப உடல் நடுங்குகின்றது.  இலக்கியத்தைப் படிக்கும்போதும் இலக்கியத்தின் இயல்புக் கேற்ப நம் உள்ளத்தில் உணர்ச்சி உண்டாகின்றது.  அவ்வுணர்ச்சிக்கேற்ப நம் முகத்தில் வேறுபாடுகள் தோன்றுகின்றன.  கவிச்சுவையும் இலக்கியச் சுவையும் நம் உள்ளத்தில் உணர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன.  இயல், இசை, நாடகம் எனும் மூன்றில் நாடகத்தில் நடிப்போரும் உணர்ச்சியை வெளிப

thamizhk katamaikal 98: தமிழ்க்கடமைகள் 98. தமிழ்ப் புகழை யாராலும் விளக்க இயலாது

தமிழ்க்கடமைகள்  98. தமிழ்ப் புகழை யாராலும் விளக்க இயலாது இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 28/09/2011  வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே தேனார்ந்த தீஞ்சுவைசால் திருமாலின் குன்றம் தென்குமரி ஆயிடைநற் செங்கோல் கொள்செல்வி கானார்ந்த தேனே கற்கண்டே நற்கனியே கண்ணே கண்மணியே அக்கட்புலஞ்சேர் தேவி ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே அம்மே நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கெளிதே - கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம் (பிள்ளை) http://www.natpu.in/?p=16067

Thamizhk katamaikal 97: தமிழ்க்கடமைகள் 97. தமிழறியா தெய்வமும் உண்டோ?

தமிழ்க்கடமைகள்  97. தமிழறியா தெய்வமும் உண்டோ? இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 27/09/2011  தமிழ்ச்சுவை யறியாத் தெய்வம் உளதெனில் அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் : அறுவகை இலக்கணம்: 672 http://www.natpu.in/?p=16006

Ilakkuvanarin pataippumanikal 66: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 66. முக்காலத்துக்குரியனவும் கூறினர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 66. முக்காலத்துக்குரியனவும் கூறினர் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 26/09/2011  ‘செவியறி வுறூஉ’ ‘வாயுறை வாழ்த்து’ என்பன புலவர்கள் பிறரைத் திருத்துவதற்காகப்பாடுவனவே. மேனாட்டில் அரசியலறிஞர்கள் பலர் – உரூசோ, காரல் மார்க்சு, பெயின், மெக்காலே போன்றவர்கள் – அவர்தம் காலத்து அரசைத் திருத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள், இன்று பேரிலக்கியங்களாய்த் திகழ்கின்றன.  அவ்வாறே, தமிழ் நாட்டிலும் அரசைத் திருத்த – நல்வழிப்படுத்த – செங்கோலாட்சி புரியக் கூறிய கருத்து நிறைந்த பாடல்கள் பேரிலக்கியப் பகுப்பினுள் அடங்குவனவாய் உள்ளன.  புலவர்கள் பொருள் கருதிப் புகழ்ந்து பொய்வாழ்வு நடாத்தினர் என்று கருதுதல் கொடிது.  இடித்துரைத்து மக்களுக்கு ஏமம் நாடும் காவலர்களாய் இலங்கினர்.  அவர்கள் பாடல்கள் இலக்கண ஆசிரியர்களால் துறைகள் வகுக்கப் பெற்றுப் பின்வரும் புலவர்கட்கு முன் மாதிரியாய்த் திகழும் நிலை பெற்றன.  அவ்வாறு தோன்றிய இலக்கியங்களைக் கொண்டுதானே ஆசிரியர் தொல்காப்பியர் திணையும் துறையும் வகுத்துச் செல்கின்றார்

thamizhk katamaikal 96: தமிழ்க்கடமைகள் 96. எண்ணமிடா நாளில் எழுந்தாய் தமிழே

தமிழ்க்கடமைகள்  96. எண்ணமிடா நாளில் எழுந்தாய் தமிழே பதிவு செய்த நாள் : 26/09/2011  வானெழுந்த நீள்கதிரும் மாக்கடலின் வீச்சும் ஏனெழுந்தது என்று எதுவும் எண்ணமிடா நாளில் தேனெழுந்த செந்தமிழே நீ எழுந்தாய்! -          கவிஞர் வாணிதாசன் : பாட்டரங்கப் பாடல்கள் http://www.natpu.in/?p=15933

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 65. புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 65. புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 23/09/2011  புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள்; மக்களை நல்வழிப்படுத்தும் விதிகள் பல அமைக்கும் சட்ட மன்றம் போன்றவர்கள்.  அரசரேயாயினும் யாவரே யாயினும் நெறிதவறிச் சென்றால் அதனை எடுத்துக்காட்டி நேர்வழி நடக்க அறிவுரை கூறுவார்கள்.  இக்காலத்து மக்களாட்சி அரசு மக்களுக்குச் கேடு பயக்கும் நெறி முறைகளை மேற்கொள்ளத் தொடங்கினால் எதிர்க் கட்சிகள் எதிர்த்து நின்று அரசின் குற்றங்களை எடுத்து இயம்புகின்றன.  அக்காலத்தில் கட்சி முறையில் ஆட்சி இல்லை.  ஆகவே புலவர்களே அப்பணியையும் ஆற்றிவந்தனர். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 234) http://www.natpu.in/?p=15736

Thamizhk katamaikal 95: தமிழ்க்கடமைகள் 95. கடவுள்தரும் தமிழே

தமிழ்க்கடமைகள்  95. கடவுள்தரும் தமிழே இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : 23/09/2011  கன்னலெ னத்தகும் இன்னமு தத்தமிழ் கடவுள்த ருந்தமிழே கற்றிட வுற்றிட நற்றவர் பெற்றருள் கண்டது செந்தமிழே தென்னக மன்னவர் அன்னவர் எல்லாம் தேர்ந்தது பைந்தமிழே தேடுதல் அற்றுயர் பாடல்வழு த்திடச் செய்வது வண்டமிழே முன்னிய எல்லா மின்னிய லேதரும் மொய்ம்புள தும்தமிழே மூவுல கும்தொழு நாவலருந் தொழ மூத்தது முத்தமிழே - புலவர் மா.க.காமாட்சிநாதன் : வள்ளலார் பிள்ளைத்தமிழ் http://www.natpu.in/?p=15740

Ilakkuvanarin pataippumanikal 64: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 64. நச்சினார்க்கினியர் வட நூல்களைத் தழுவி உரைத்துள்ளார

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 64. நச்சினார்க்கினியர் வட நூல்களைத் தழுவி உரைத்துள்ளார் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 22, 2011  வெற்றி பிறருடன் உறழ்ந்தும் (போட்டியிட்டும்) பெறலாம் ; தாம் மேற்கொண்டுள்ள ஒன்றுள் தாமே வீறு பெற்று உயர்ந்தும் பெறலாம்.  நச்சினார்க்கினியர் பிறரோடு உறழ்ந்து பெறும் வெற்றியை வாகையென்றும் தாமாகத் தம் துறையில் மேம்படு வென்றியை முல்லையென்றும் அழைப்பர்.  ஆனால் ஆசிரியர் முல்லை யென்ற ஒன்றைச் சுட்டிக் கூறினாரிலர்.  நாவலர் பாரதியார் அவர்கள் “உறழ்பவரின்றி ஒரு துறையில் ஒப்புயரும் பரிசும் வாகையேயாகும்”"  என்றார். இவ்வகை எழு வகைப்படும். 1.    அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் 2.    ஐவகை மரபின் அரசர் பக்கமும் 3.    இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் 4.    மறுவில் செய்தி மூவகைக் காலமும்  நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும். 5.    நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும் 6.    பாலறி மரபின் பொருநர் கண்ணும் 7.    அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையில் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர். இந்நூற்பாவுக்கு நச்சின

thamizhk katamaikal 94: தமிழ்க்கடமைகள் 94. தாயன்பும் தாய்த்தமிழும்

தமிழ்க்கடமைகள்  94. தாயன்பும் தாய்த்தமிழும் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 22, 2011  அணைக்கட்டால் மறித்தாலும் வாய்க்காலாகி அதிகவளம் தருகின்ற ஆற்றைப் போல இணையில்லா ஈகத்தால் எளியோர் தம்மை ஏற்றெடுத்துக் காப்பாற்றும் சான்றோர் போல கணிப்பரிய பெரும்புகழை ஈட்டி வைத்துக் காலத்தை வென்றிருக்கும் தமிழி னோடு தணிப்பரிய அன்புடனே பழகு கின்றேன் தனியன்புத் தாயன்பைக் காணு கின்றேன். -          சாலை இளந்திரையன்: தாய் எழில் தமிழ்: தாய்மொழி: 1   http://www.natpu.in/?p=15662

Ilakkuvnar pataippumanikal 63: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 63. தமிழர் உயர் நாகரிகச் சிறப்பு மலை விளக்காய் இலங்குகின்றது

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 63. தமிழர் உயர் நாகரிகச் சிறப்பு மலை விளக்காய் இலங்குகின்றது இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 21, 2011  ஆசிரியர் தொல்காப்பியர் “அமைதியை நிலைநாட்டப் போர் புரிதலை இலக்கியங்களில் பாராட்டலாம்.  இலக்கியப் பொருளாகக் கொள்ளலாம்.  காரணமின்றி வலிமை யொன்றே கருதிப்போரிடும் கயவர்களை இலக்கியங்களின் பொருளாகக் கொண்டு இலக்கியம் இயற்றுதல்  கூடாது” என்று வழிகாட்டியுள்ளார்.  இங்கும் இருபதாம் நூற்றாண்டின் உயர் கொள்கையாகக் கருதப்படும் பகை தணிவினைப் போரைத் தொல்காப்பியர் கூறியுள்ளமையால் தமிழர் உயர் நாகரிகச் சிறப்பு மலை விளக்காய் இலங்குகின்றதை எண்ணி மகிழலாம்.  தமிழன் என்று சொல்லலாம்.  தலைமிர்ந்து நிற்கலாம்.  அமைதியை நிலை நாட்டும் போர் என்றும் வேண்டியதுதான். அமைதியை அழிக்கும் போர் மறைய வேண்டியதுதான்.  போர்  ஒழிக்கும் புதுமை இலக்கியம் போற்றுக.  தும்பைத் திணை பன்னிரண்டு துறைகளுடையது.  பன்னிரண்டு துறைகளும்  பண்டைத் தமிழகப்படை மறவரின் ஆண்மை மிகு வீரத்தை அழகுற விளக்குகின்றன.  அக்காலத்தில் தேர்

thamizhk katamaikal 93: தமிழ்க்கடமைகள் 93. தமிழ்த்தாயை வணங்கிடுவோம்

தமிழ்க்கடமைகள்  93. தமிழ்த்தாயை வணங்கிடுவோம் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 21, 2011  தாயை வணங்கிடுவோம்- தமிழ்த் தாயை வணங்கிடுவோம் . . . .              . . . . .                . . . . . செந்தமிழ் நற்றமிழ் முத்தமிழ் பாரினில் செம்மை மொழி தமிழ் என்றும் வளர்மொழி நந்தமிழ் இன்பமே நல்கிடும் நன்மொழி எந்தமிழ் பைந்தமிழ் என்றுமே போற்றுவோம். - புலவர் புஞ்சையரசன்: தமிழ் எழுச்சிப் பாடல்கள்: பக்.1 http://www.natpu.in/?p=15608

Ilakkuvanarin pataippu manikal 62: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 62. தமிழர்கள் ஒன்றுமறியாக்காட்டுவாழ் மக்கள் அல்லர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்  62. தமிழர்கள் ஒன்றுமறியாக்காட்டுவாழ் மக்கள் அல்லர் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 20, 2011  இவை மூன்றினாலும் தமிழர்கள் ஒன்றுமறியாக்காட்டுவாழ் மக்கள் அல்லர் ; இருபதாம் நூற்றாண்டு நாகரிகத்தினை இயல்பாகவே கொண்டிருந்தனர் என்று தெளிதல் கூடும்.  இம்முறைகள் ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாக ஏதோ ஒர் இடத்தில் யாரோ ஒருவரால் செய்யப்பட்டனவாக இராமல் அமைப்பு முறைகளாக அமைந்து யாவராலும் போற்றப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 220) http://www.natpu.in/?p=15349

thamizhk katamaikal 92: தமிழ்க்கடமைகள் 92. விந்தை புரிந்தவை தமிழ்ச் சொற்களே

தமிழ்க்கடமைகள் 92. விந்தை புரிந்தவை தமிழ்ச் சொற்களே இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 20, 2011  தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை உண்ட பாலனை அழைத்ததும், எலும்பு பெண் உருவாக் கண்டதும், மறைக் கதவினைத் திறந்தும் கன்னித் தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர் ! - பரஞ்சோதி முனிவர் : திருவிளையாடல் புராணம்   http://www.natpu.in/?p=15464

Ilakkuvanarin pataippu manikal 61: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 61. நல்லரசின் போர்க்கொள்கை

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 61. நல்லரசின் போர்க்கொள்கை இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 19, 2011  இவ்விருபதாம் நூற்றாண்டில் நாகரிகமுற்ற நல்லரசுக் கொள்கையாக விளங்கும் ஒன்று ஆசிரியரால் கூறப்பட்டிருப்பது, தமிழினத்திற்குப் பெருமை தருவதன்றோ – போர் – போர்க்காக அன்று ; நாட்டை விரிவுபடுத்த அன்று ; பிறரை அடிமை கொள்ள அன்று – விரிவுபடுத்தவும் அடிமைப்படுத்தவும் போர் தொடுக்கும் எண்ணம் கொண்டுள்ள அரசு மீது போர் தொடுப்பது எனின் அப்போர் அமைதிப்போர், அறப்போர் என அழைக்கப்படும் தகுதியுடைய அன்றோ? “எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே.” எஞ்சா = குறையாத, மண்நசை = மண்ணாசையுடைய வேந்தனை = அரசனை, வேந்தன் = நல்லறம் கருதும் அரசன், அஞ்சுதக = மண்ணாசை மன்னன் அஞ்சுமாறு, தலைச்சென்று = முன் படையெடுத்துச் சென்று, அடல் குறித்தன்றே = வெல்லுதல் குறித்ததாகும் வஞ்சி. (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 217-218) http://www.natpu.in/?p=15347

thamizhk katamaikal 91: தமிழ்க்கடமைகள் 91. தமிழ்த்தாயே உதவுவாயே

தமிழ்க்கடமைகள்  91. தமிழ்த்தாயே உதவுவாயே இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 19, 2011  தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே களிவர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்; கண்ணீர்த் துளிவரஉள் ளுருக்குதல் இங்கிவை எல்லாம் நீஅருளும் தொழில்கள் அன்றோ? ஒளிவளரும் தமிழ்வாணீ அடியேற்கு இவையனைத்தும் உதவு வாயே -          பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியார் http://www.natpu.in/?p=15337

Ilakkuvanarin padaippumanikal 60: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 60. தொல்காப்பியரைப் பெண்ணுலகம் நாளும் போற்றுதல் வேண்டுமன்றோ?

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 60. தொல்காப்பியரைப் பெண்ணுலகம் நாளும் போற்றுதல் வேண்டுமன்றோ? இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 18, 2011  இவ்வெழுவகைக் கூற்றால் அறத்தொடு நிற்கும் பொழுது தலைவியின் விருப்பத்தைக் குறிப்பாலறிந்து தோழி சொல்லற்பாலள்.  தலைவி எளிதில் மறையை வெளிப்படுத்த மாட்டாள்.  பெண்களுக்குரிய சிறப்புக் குணங்கள் அடக்கமும் மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளமும், நடுநிலைமையும், உரியகாலத்தில் உரியன கூறலும்.  அறிவுடைமையும், உள்ளக்கருத்தை எளிதில் அறிவியாமையும் ஆம், பெண்கயடிளைப் பற்றி ஆசிரியர் தொல்காப்யிர் இவ்வளவு உயர்வாகக் கூறியிருத்தலை பெண்கசே அறியார்.  நமது நாட்டில் பெண்களை இழிவு படுத்தும் உளப்பாங்கு இடைக் காலத்தில் தோன்றியது ’ எண்ணறக்கற்ற எழுத்தற ஓதினும் பெண் புத்தி என்பது பெரும் பேதைமைத்தே என்றனர்.  ‘பேதைமை என்பதும் மாதர்க்கு அணிகலம்’ என்றனர். ‘ஆழாழியன்ன அளவுபடா வஞ்ச நெஞ்சப் பாழான மாதர்’   என்றனர். ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்பனவே அவர்க்கியல்பாக உள்ளன என்றனர்.  ஆனால் ஆசிரியர் தொல்காப்பியர் கூறுவ

Thamizhk katamaikal 90: தமிழ்க்கடமைகள் 90. புவிதோன்றியபோதே தோன்றியது தமிழ்

தமிழ்க்கடமைகள்  90. புவிதோன்றியபோதே தோன்றியது தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 18, 2011  கல்லும் தோன்றிடக் கார்வளித் தோன்றிட அல்லும் தோன்றிட ஆர்கலி தோன்றிடப் புல்லும் தோன்றிடத் தோன்றிய மண்ணினில் சொல்லும் தோன்றிடத் தோன்றிய தேதமிழ் - வாணிதாசர்: பாட்டரங்கப் பாடல்கள்: பக்.151 http://www.natpu.in/?p=15335

Ilakkuvanar pataippu manikal 59: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 59. நச்சினார்க்கினியர் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து விட்டார்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 59. நச்சினார்க்கினியர் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து விட்டார் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 17, 2011  இவ்வாறு நேர் பொருள் காணுவதை விடுத்து நச்சினார்க்கினியர் வடமொழி நூற்பொருளை நச்சி நூற்பாவின் சொற்கோப்பைச் சிதைத்து உளம் போனவாறு உரைகளைக் கூறித் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து வடவர் வாழ்வு முறையே தமிழர்க்கும் என நிலைநாட்டித் தம் வடமொழிப் புலமையை வையம் அறிந்து மகிழ வகை செய்து விட்டார்.   உரையாசிரியர்களின் உரைகளை ஓர்ந்து உண்மை தெளிதலே கற்போர் கடனாகும். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 198) http://www.natpu.in/?p=15343

thamizhkkatamaikal 89: தமிழ்க்கடமைகள் 89. துன்பம் அகன்றிடும்

தமிழ்க்கடமைகள்  89. துன்பம் அகன்றிடும் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 17, 2011  அன்பு மலர்தூவி நல் அரிச்சுவடி கையேந்தி இன்பத் தமிழ்மொழியை இனிமையுடன் யாம் வளர்க்க துன்பம் அகன்றிடவே தூயஒளி வீசிடவே துள்ளி எழுந்தேனம்மா அள்ளிப் பருகிடவே - கோலாலம்பூர் க.ம.துரைசாமி, மலாயா: நாடும் நாமும்: பக்கம்.40 http://www.natpu.in/?p=15333

Ilakkuvanarin pataippumanikal 58: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 58. உரையாசிரியர் தாம் அறிந்தவற்றையெல்லாம் நூலினுள் புகுத்த முயலுதல் பெருந்தவறு

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 58. உரையாசிரியர் தாம் அறிந்தவற்றையெல்லாம் நூலினுள் புகுத்த முயலுதல் பெருந்தவறு இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 16, 2011 மூன்று வருணத்தார்க்கும் கூறினார் என்று நச்சினார்க்கினியர் கூறுவதிலிருந்து பெரும்பான்மை மக்களாம் வேளாளர் கற்பதற்கு உரிமை பெற்றிலர் என்பது தானே வெளிப்படுகிறதன்றோ? தொல்காப்பியர் தமிழர் அனைவர்க்கும்    நூல் செய்தனரேயன்றி அவர் காலத்தில் தமிழ் நாட்டில் இல்லாத வருண பாகுபாட்டை உளங்கொண்டு நூல் செய்தார் என்றல் பொருந்துமா? உரையாசிரியர் என்போர் தாம் அறிந்தவற்றையெல்லாம் நூலினுள் புகுத்த முயலுதல் எவ்வளவு பெருந்தவறு என்பதைப் பல நூல்களுக்கு உரைகண்ட பெரும்புலவர் நச்சினார்க்கினியர் உணராது போயினரே.  இவ்வளவு வலிந்து புகுத்த விரும்பியது எற்றுக்கோ? அகத்திணை யியலில், ” உயர்ந்தோர்க்குரிய ஓத்தின் ஆன”" என்பதற்கும் பொருந்தா உரையே புகன்றுள்ளார்.  ஓத்தின் ஆன = வேதத்தினால் பிறந்த வட நூல்களும் தமிழ் நூல்களும், உயர்ந்தோர்க்குரிய = அந்தணர் வணிகர்க்கும், உயர்ந்த வேளாளர்க்க

Thamizhk katamaikal 88: தமிழ்க்கடமைகள் 88. வாழ்க நீ தாயே! வையகம் உளநாள்

தமிழ்க்கடமைகள்  88. வாழ்க நீ தாயே! வையகம் உளநாள் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 16, 2011  அமிழ்தினும் இனிய அன்னைத் தமிழே ‘அமிழ்து’ ‘அமிழ்து’ என்றுரைத் ததாலே ‘தமிழ்’ ‘தமிழ்’ என்னும் பெயர்பெற் றனையோ? இழ்-இழ் எனும் மழலைச் சொல் பயிற்றியே தய் சேய்ச் சொல்லைத்தம்-இழ் என்பார் தமிழ் என்றதாலே தமிழா யினையோ? உலக மொழிகளுள் முதன்மொழி ஆகலின் மனித குலத்தின் குதலை மொழிப் பேச்சாம் மழலை ஒலியால் தமிழென்று புகன்றனரோ? இழுமென் மொழி நின்னடை ஆகலின் இனிமைப் பொருளும் பயந்தனை அன்றோ? ஈன்ற அன்பினில் சுரக்கும் அமுதினைச் சாலப் பரிந்தூட்டும் தாயினும் மேலாய்க் கோலச் சொற்களில் சுரக்கும் அறிவினைக் கால மெல்லாம் ஊட்டுந் தாயே தமிழே ஈன்று புரந்தவள் என்தாய் எனினும் நன்றும் தீதும் தெளிந்திடச் செய்யும் அன்னை யாவோய் நின்னை வணங்குகிறேன். இருந்தமிழே-உன்னால் இருந்தேன்-வளர்ந்தேன் இமையோர் அமிழ்தமாயினும் வேண்டேன் எனும் உரமென் உள்ளத்தே எந்நாளும் உறைந்திட உயிரொடுங் கலந்த உவரா அமிழ்தே வாழ்க நீ தாயே வையகம் உளநாள் வாழ்க தமிழ்மொழி வாழ்க

Ilakkuvanarin padaippumanikal 57: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 57. களவில் காதலித்தோர் கற்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 57. களவில் காதலித்தோர் கற்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 15, 2011  தொல்காப்பியர் காலத்துக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்னர் திருமணச் சடங்கு அல்லது உறுதிச் சான்று இல்லாமல் தம்முள் காதலித்துக் கணவனும் மனைவியுமாய் வாழ்ந்தனர்.  பின்னர் அவ்வாறு வாழ்ந்து வருவதற்கு இடையூறாகப் பொய்யும் நம்பிக்கைக்கேடும் (வழு) தோன்றவே களவில் காதலித்தோர் கற்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விதித்தனர் தமிழ்நாட்டு மேலோர் என்பதே இந்நூற்பாவின் நேர்பொருள். (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 182) http://www.natpu.in/?p=15339

thamizhk katamaikal 87 :தமிழ்க்கடமைகள் 87. தமிழ் இல்லையேல் இன்பம் இல்லை

தமிழ்க்கடமைகள்  87. தமிழ் இல்லையேல் இன்பம் இல்லை இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 15, 2011  தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே- நீயே தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலையென்றால் இன்பமெனக் கேது - கவிஞர் முடியரசன்: பூங்கொடி: தமிழ்த் தெய்வ வணக்கம் http://www.natpu.in/?p=15326

Ilakkuvanarin padaippumanikal: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 56. தொல்காப்பியர் குறிப்பிடும் ஐயர் வேறு; பிராமணர் வேறு

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 56. தொல்காப்பியர் குறிப்பிடும் ஐயர் வேறு; பிராமணர் வேறு இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 13, 2011  இனி இக்கரணம் தோன்றுதற்குரிய காரணம் கூறினார்.  இல்லறம் என்பது நடைபெறுவதற்குக் கணவனும் மனைவியும் காதலால் கூடுதல் வேண்டும்.  காதலால் கூடிய ஆடவரும் மகளிரும் கணவனும் மனைவியுமாக இணைந்து என்றும் வாழ்தல் வேண்டும்.  மறைவாகக் காதல் பூண்டு ஒழுகி மகளிர் நலம் துய்த்துவிட்டுப் பின்னர் மகளிரைக் கைவிடும் ஆடவரும் இருந்திருப்பர்.  பல பூக்களை நாடும் தேன்வண்டுபோல மகளிர் இளநலம் நாடி ஒருவரை விட்டு ஒருவரைப் பின்தொடரும் ஆடவரும் இருந்திருப்பர்.  மகளிர் அழகில் மயங்கி அவரைப் பன்முறையில் சிறப்பித்துக் கூறி அவர் காதலைப் பெற்ற பிறகு அவரை மறந்து வேறொரு பெண்ணிடம் காதல் வலை வீசும் ஆடவரும் இருந்திருப்பர். “கூந்தல் நரைப்பினும் கொங்கை தளரினும் உன்னைக் கைவிடேன்” என்று உறுதிமொழி கூறிவிட்டுப் பின்னர்க் கைவிடும் ஆடவரும் இருந்திருப்பர்.  ஆதலின் தமிழ் நாட்டுத் தலைவர்கள் – பெரியோர்கள் – சான்றோர்கள் இங்ஙனம் பொய்

Thamizhk katamaikal 86: தமிழ்க்கடமைகள் 86. அனைத்திலும் சிறந்தது தமிழ்

தமிழ்க்கடமைகள் 86. அனைத்திலும் சிறந்தது தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 13, 2011  எண்ணிற் சிறந்ததுந் தமிழ் எழுத்திற் சிறந்ததுந் தமிழ் பண்ணிற் சிறந்ததுந் தமிழ் ரிற் பரந்ததுந் தமிழ் மண்ணிற் பழையதுந் தமிழ் மாசற் றொளிர்வதுந் தமிழ் கண்ணிற் சிறந்ததுந் தமிழ் கன்னிமை சான்றதுந் தமிழ் http://www.natpu.in/?p=15243

Book review: viyakka vaikkum kadhal by Maaththalai Somu: வியக்கவைக்கும் தமிழர் காதல்

வியக்கவைக்கும் தமிழர் காதல் மாத்தளை சோமு First Published : 05 Sep 2011 12:33:46 AM IST Last Updated : 05 Sep 2011 12:37:59 AM IST வியக்கவைக்கும் தமிழர் காதல் - மாத்தளை சோமு; பக்.320; ரூ220; தமிழ்க்குரல் பதிப்பகம், 5/15, 5-வது முதன்மைச் சாலை, ஞானம் காலனி, இராமலிங்க நகர், திருச்சி-3.அகத்திணைப் பாடல்களில் உள்ள காதல் சிறப்புகளை விளக்கி, வியக்க வைத்திருக்கிறது இந்நூல். ""அன்பு, காதல், காமம் முதலிய சொற்களுக்கு விரிவான விளக்கம் தருகிறார். காமம் என்ற சொல்லுக்கு, இதுவரை, "கமம் நிறைந்தியலும்' எனும் தொல்காப்பிய நூற்பாப்படி (838) விளக்கம் தந்துள்ளார். அது இன்பம் துய்த்தடையும் மன நிறைவு' என இவர் விளக்குவது ஒரு சிறப்பாகும். மேலும், காமம் என்றால் வேளாண்மை-விவசாயம் என்று இலங்கையில் வழங்குவதை எடுத்துக் காட்டுகிறார். "கமக்காரன்' என்பார்களாம். காமம் என்பது அதனுடன் தொடர்புடை வந்த தமிழ்ச்சொல் எனக் கூறுகிறார். திருவள்ளுவரை "காதற்கவிஞர்' என்று பாராட்டும் இவர், நாயன்மார்களும் பட்டினத்தாரும் அருணகிரியார

books: perumpaanaatru padai & madurai kaanchi by ko'kkalai rajan: பெரும்பாணாற்றுப்படை&மதுரைக் காஞ்சி

Image
பெரும்பாணாற்றுப்படை கோக்கலை ஜே.ராஜன் First Published : 05 Sep 2011 12:35:05 AM IST பெரும்பாணாற்றுப்படை (ஆராய்ச்சியுரை); பக்.336; ரூ.100; மதுரைக் காஞ்சி (ஆராய்ச்சியுரை); பக்.368; ரூ.100; (இருநூல்கள்); கோக்கலை ஜே.ராஜன்; வெளியீடு: "மகராணி', சென்னை-101; )044-26543963/9445019814.பத்துப்பாட்டு நூல்களுள் பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி ஆகிய இருநூல்களும் குறிப்பிடத்தக்கவை. பெரும்பாணாற்றுப்படை 500 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது. தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்று வந்த ஒருவன், பரிசில் பெறுதற்குரிய பெரும்பாணன் ஒருவனை ஆற்றுப்படுத்தியதற்காக அந்த இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாடல்கள்தான் பெரும்பாணாற்றுப்படை. மாங்குடி மருதனார் என்பவரால் இயற்றப்பட்டது மதுரைக்காஞ்சி. இந்நூல் 782 அடிகள் கொண்ட, முதலிலும் இடையே சிலவிடத்தும் வஞ்சியடிகள் வந்த ஆசிரியப்பாவால் ஆனது. தலையாலங்கானத்துச

Ilakkuvanarin padaippumanikal 54: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 55. சாதிகள் இல்லாத காலத்தில் சாதி வேறுபாடு எங்ஙனம் தோன்றும்?

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 55. சாதிகள் இல்லாத காலத்தில் சாதி வேறுபாடு எங்ஙனம் தோன்றும்? இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 12, 2011  காதலிக்கும் ஒருவன் காதல் மணந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுமேல் இருவரும் இக்காலம் போல வாளா இருந்துவிடார்.  காதலன் காதலியை அவள் பெற்றோரிடமிருந்து பிரித்துக் கொண்டு சென்றுவிடுவான்.  இதுதான் உடன் போக்கு என்னும் துறைக்கு உரியதாகும்.  இவ்வுடன் போக்கு இந்நாட்டில் சிறுவழக்காகவும் பிறநாடுகளில் பெருவழக்காகவும் நிகழக் காண்கிறோம். வயது வந்த பெண் தான் விரும்பிய காதலனுடன் மணவினை நோக்குடன் புறப்பட்டுச் செல்வது சட்டப்படி குற்றமும் ஆகாது.  தலைவியின் விருப்பம்  அறிந்து அவள் தூண்டுதலால் தலைவன் கொண்டுசெல்வதால் வலிதிற் கொண்டு செல்லும் அரக்கர் முறையும் ஆகாது.  இவ்வாறு கொண்டு செல்லும் தலைவன் தலைவியைக் கொடுக்கும் தமரின்றியும் மணந்து கொள்வான். ” கொடுப்போ ரின்றியும் கரண முண்டே புணர்ந்துடன் போகிய காலை யானே” தமிழரிடையே பண்டு தொட்டு நடந்துவரும் திருமண முறையில் சாதி வேறுபாடு இல்லாதிருந்தது

thamizhkkatamaikal 84: தமிழ்க்கடமைகள் 84. தமிழ்மேல் ஆணை!

தமிழ்க்கடமைகள்  84. தமிழ்மேல் ஆணை! இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 12, 2011  என்னுயிரைத் தூக்கி எறிந்து தமிழணங்கே அன்னை நினதுயிராய் ஆவேன் நான் … ஆணையடி! … உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார் http://www.natpu.in/?p=15145

Ilakkuvanarin padaippumanikal 54: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 54. எழுத்துச் சான்றுடன் திருமணம்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 54. எழுத்துச் சான்றுடன் திருமணம் இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 10, 2011  கரணம் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம்.  இக்காலத்துங் கரணம் என்று சொல்லப்படுபவர்கள் ஊர்க்கணக்கு எழுதும் கணக்கப்பிள்ளைகள் ஆவார்.  கரணம், கணக்கு எழுதுவோரைக் குறிப்பதால் எழுதுதலையும் குறிப்பதாகும்.  ஆதலின் இன்ன ஆடவனுக்கு இன்ன பெண் மனைவி என்று எழுதிக்கொள்ளும் பழக்கமும் இருந்திருக்கலாமன்றோ? அவ்வாறு எழுதுதலையே ஆசிரியர் தொல்காப்பியர் கரணம் என்று குறித்திருக்கலாமன்றோ? இன்றும் பழங்கால முறைப்படி திருமணம் கொள்வோர், திருமணத்துக்கு முன்னால் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் மணமகள் வீட்டில் கூடி இவ்வாறு எழுதி உறுதிப்படுத்திக் கொள்வதைக் காணலாம்.  இந்நிகழ்ச்சியை மணவோலை எழுதுதல் என்றும், நிச்சயார்த்தம் என்றும்,  வெற்றிலை பாக்கு மாற்றுதல் என்றும் அழைப்பர்.  தொல்காப்பியர் காலத்து வழக்கமே இன்றும் தொடர்ந்து வந்துள்ளது என்று கொண்டால் குற்றம் என்னை? இப்பழக்கமே பதிவு முறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆதல

thamizhkkatamaikal 83: தமிழ்க்கடமைகள் 83.தமிழே! நீயே என் இயக்கம்!

தமிழ்க்கடமைகள் 83. தமிழே! நீயே என் இயக்கம்! இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 10, 2011  தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்! அமிழ்தே! நீ தரும் இன்பம்… அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும். … உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார் http://www.natpu.in/?p=15041

thamizhk katamaikal 82: தமிழ்க்கடமைகள் 82. தமிழே! உயிரே!

தமிழ்க்கடமைகள் 82. தமிழே! உயிரே! இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 9, 2011  தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்! … உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார் http://www.natpu.in/?p=14956

Ilakkuvanarin padaippu manikal 53- karpu (chastity): இலக்குவனாரின் படைப்பு மணிகள் 53.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 53. கற்பு இருசாரார்க்கும் இருக்கவேண்டிய பண்பாகும்   இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 8, 2011  கற்பு என்பது பெண்களுக்குரிய தனிமைப்பண்பு என்று இன்று கருதப்படுகின்றது.  தான் மணந்து கொண்ட ஆடவன் ஒருவனையன்றி வேறு ஒருவனை உள்ளத்தாலும் விரும்பாத இயல்புதான் கற்பாகும் என்பர்.  எங்கோ பிறந்த ஆடவனும் எங்கோ பிறந்த பெண்ணும் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு உள்ளம் ஒன்றிக் கற்பித்துக்கொள்ளுதலினால் கற்பு எனப்பட்டது.  இவ்வாறு கற்பித்துக்கொண்டு ஒழுகுகின்றவர்கள் வேறொருவரைக் காதலிக்கத் தொடங்கினால் இக்கற்பு நிலைக்கு இழுக்கு என்று கருதினர்.  ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கொள்கைவழி வாழும் இக்கருத்தில் இக்கற்பு கணவன் மனைவி இருசாரார்க்கும் இருக்கவேண்டிய இயல்புப் பண்பாகும்.  பருவம் உற்ற ஆடவன் பருவம் உற்ற பெண்ணைக் கூடி வாழத் தலைப்படுங்கால் இக்கற்புநிலை மேற்கொள்ளப்பட வேண்டியதொன்று. (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:173) http://www.natpu.in/?p=14829

thamizhkkatamaikal 81: தமிழ்க்கடமைகள் 81. தமிழ் உணர்வு

தமிழ்க்கடமைகள் 81. தமிழ் உணர்வு இலக்குவனார் திருவள்ளுவன் பதிவு செய்த நாள் : September 8, 2011  தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார் http://www.natpu.in/?p=14825

Loneliness -A FreeVerse by Ilakkuvanar Maraimalai

Image
Loneliness -A FreeVerse ILAKKUVANAR MARAIMALAI , Yahoo! Contributor Network May 24, 2008 "Contribute content like this. Start Here ."          Loneliness Oh!My dear grand children! When your parents came You both jumped with joy Merrily sat down in the car And left us..... Your grandpa and grandma In dark.. How could I express The pain of loneliness Which we experience together? The whole house has lost The musical rhythm of Your sweet utterances The cloth-made Teddy bears Which gained new life in your hands Were totally dead in despair. The plastic Toys and The celluloid dolls are weeping continuously expecting your return. The huge cot and the foam bed upon it where you will be running Playing a 'Hide&Seek' game Making us wake up Till midnight are longing for the soft touch of your flowery feet We can't wait till Monday Please hurry up and save us

100 Lectures on 100 Poets -A Literary Achievement

Image
100 Lectures on 100 Poet s -A Literary Achievement F rom 8-8-1995 to 25-11-2008, I had been asked by the literary wing of Y.M.C.A.Esplanade, (Chennai) to give a serial lecture on Contemporary Tamil poets. The serial started on Eighth of August 1995 and on 25-11-2008(i.e. last month) I delivered the 100 th lecture. Why it took Thirteen years? Usually there will not be any meeting in the month of May. From 1997 to 1998 I went on a foreign assignment, as a Visiting Professor at University of California, Berkeley.During the years 2006(June), 2007(January February) and 2008 (July August) I went on foreign trips thereby missing the chance of lecturing for four months. These interruptions delayed The chance of fulfilling the 100 th lecture at an earlier date. But even then I am sure; nobody in the earth would have delivered continuously Hundred Lectures on Hundred contemporary poets. The dates will be notified later after going through the records of Y.MC.A.Literary wing. Do

An Ode to My Father

Image
An Ode to My Father - My Friend,Philosopher and Guide ILAKKUVANAR MARAIMALAI , Yahoo! Contributor Network May 1, 2009 "Contribute content like this. Start Here . My dear Father! You remain in my memory for ever; How can I forget you? The rhythm of my heart Pronounces every second your name! The sun that refreshes me Reminds me your face full of grace! When compared to your noble character The tall Himalayan mounts Diminish like a dwarf; The flow of Niagara falls Reminds me, how you will rush to help, People in distress; Roaring thunders Always try to imitate your Loud protests against the rulers, who denied, our linguistic human rights; You started an agitation to protect our language, Tamil, Fearless about the atrocious government; They imprisoned you twice; You were dismissed from your Professor post Several times; I am sorry people are ignorant of your dedicated life; You functioned as a 'One man' army Against the imposition of Hindi