Posts

Showing posts from October, 2010
Image
இந்த வாரம் கலாரசிகன் First Published : 31 Oct 2010 03:37:41 AM IST Last Updated : கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு அளப்பறிய பங்களிப்பு நல்கியோரில் முதல்வர் யார் என்று யாராவது என்னைக் கேட்டால், கிஞ்சித்தும் தயக்கமின்றி நான் பகரும் பெயர், "தமிழ்த் தென்றல்' திரு.வி.க. என்பதாகத்தான் இருக்கும். அவரது இதழியல் பங்களிப்பு ஒருபுறம் இருக்க, ஆன்மிகம், அரசியல், இலக்கியம் என்று எல்லா தளங்களிலும் பங்களிப்பு நிகழ்த்திய மகான் "மயிலை முனிவர்'. மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்த பெருமையும் திரு.வி.க.வையே சாரும்.  "முருகன் அல்லது அழகு' என்றொரு புத்தகம். காரைக்குடியிலிருந்து வெளிவந்த "குமரன்' என்கிற மாத இதழின் முதல் இதழில் திரு.வி.க. "முருகன்' என்க

முரண்சுவை-40: பாட்டுக் கோட்டை!

Image
முரண்சுவை-40: பாட்டுக் கோட்டை! ராஜேஷ் First Published : 31 Oct 2010 12:00:00 AM IST Last Updated : 1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி கல்யாண சுந்தரம் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. அப்பொழுது நான் என்னுடைய அத்தையின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அத்தையின் கணவரான அணைக்காடு டேவிஸ் என்பவர்தான் (அந்தக் காலத்தில் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்)  கல்யாண சுந்தரத்தைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர். எனவே அவரது பெயருக்கு தந்தி வந்தது. "கல்யாணப் பரிசு' படம் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த எனக்கு அந்தச் செய்தி ஓர் அதிர்ச்சியைத் தந்தது. தத்துவப் பாடலானாலும் தாலாட்டுப் பாடலானாலும் இயற்கையைப் பாடினாலும் காதல
Image
பிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் First Published : 26 Sep 2010 12:29:00 AM IST Last Updated : கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிகம் அறிய வாய்ப்பில்லை. இன்று அவர் இருந்திருந்தால் இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கண்டிருப்பார். ""காளிதாசன் (சம்ஸ்கிருத மொழிக்கவிஞர்-காளிதாசன் பாரதியாரின் புனைபெயர்), பாரதிதாசன் (சுப்புரத்தினம்), சுரதா (சுப்புரத்தின தாசன்), கம்பதாசன் இவர்கள் நம்நாட்டு முதல்தர கவிஞர்கள். இவர்கள் பிறவிக் கவிஞர்கள்'' என்று பாரதிதாசன் வரிசையில் கம்பதாசனையும் இணைத்து மூத்த எழுத்தாளர் வ.ரா., புகழ் மகுடம் சூட்டி மகிழ்ந்தது ஒன்றே போதும்.""கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இய
"பாரதி பித்தர்' தொ.மு.சி. ரகுநாதன் கலைமாமணி விக்கிரமன் First Published : 02 Oct 2010 11:04:00 PM IST Last Updated : தொ.மு.சி. ரகுநாதன்' - எழுத்தும் பெயரும் அறியாதவர்கள் மிகக் குறைவே.1941-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் தாக்கம், அடிமைப்பட்டிருந்த பாரதம் முழுவதும் எதிரொலித்தது. ரகுநாதன் போன்ற இளம் ரத்தம் ஓடுபவர்கள் துடித்தெழுந்தார்கள். அவர் துடிப்புக்கு வழிகாட்டியாக, திருநெல்வேலியில் முத்தையா தொண்டைமான் என்ற தேசியவாதி, அந்நியர் ஆட்சியை அகற்றும் விடுதலைப் போராட்டங்களில் இளைஞர்களை ஈடுபடச் செய்தார்.ரகுநாதன், திருநெல்வேலி மாவட்டத்தில், 1923-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி முத்தையா தொண்டைமான் - முத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்புக் காலத்
இவளைச் சொல்லிக் குற்றமில்லை தெள்ளாறு ந.பானு First Published : 10 Oct 2010 12:00:00 AM IST Last Updated : 10 Oct 2010 10:29:53 AM IST யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற உயர்ந்த நோக்குடன் வாழ்வது தமிழர் மரபு. ஆனால், மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் வாழ்ந்த ஒரு தலைவன், தான் பெற்ற துன்பம் வேறு எவரும் பெறக்கூடாது என்ற எண்ணத்தில் கற்போர் மனதில் நிற்கும் வண்ணம் தன் கருத்தை வெளியிடும் பாங்கமைந்த பாடல் ஒன்றைப் பாடியுள்ளான். இத்தலைவன் நரபதி என்று எல்லோராலும் போற்றப்படும் நந்திவர்மனுக்குரிய மயிலாப்பூரில் வாழ்ந்து வருகிறான். ஒருநாள் வீதியில் வந்துகொண்டிருக்கிறான். எதிரே பேரழகி ஒருத்தி வரக்காண்கிறான். வள்ளுவர் காட்டும் தலைவன் வர்ணிப்பதுபோல,  முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்தோள் அவட்கு  அதாவது,
பொன்னியின் புதல்வர் எழுதிய சுந்தா கலைமாமணி விக்கிரமன் First Published : 10 Oct 2010 12:00:00 AM IST Last Updated : 10 Oct 2010 10:29:07 AM IST பொன்னியின் புதல்வர்' என்று பெயரிடப்பட்ட அமரர் "கல்கி'யின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று 1976-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த வரலாற்று நூலில் "இந்த வரலாறு தோன்றிய வரலாறு' என்று நூல் எழுதப்பட்ட வரலாற்றை, கல்கியின் புதல்வர் கி.ராஜேந்திரன் ஐந்து பக்கங்களில் சிறந்த, பயனுள்ள தகவல் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ""தினமணி கதிரில், தம் புதுதில்லி வாசத்தின் அனுபவங்களை எழுதத் தொடங்கினார் ஒருவர். அதைப் படித்தவுடன் "அடடா! இவரன்றோ அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதச் சரியான ஆசாமி என்று தோன்றியது'' என்று எழுதியுள

மறைமலையடிகளார் மாண்பு!

Image
மறைமலையடிகளார் மாண்பு! - மா.க ஈழவேந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் - இலங்கை நாடுகடந்த தமிழீழ அரசின் கனடாப்பேராளர் த னித்தமிழ் இயங்கங் கண்ட தந்தை மறைமலை அடிகள்... தமிழக மண்ணில் 15-07-1876; விண்ணில் - 15-09-1950.       15-09-1909ல் அறிஞர் அண்ணா தோன்றினார். 15-09-1950ல் மறைமலை அடிகள் மறைந்தார்.  இவ்விரு பெருமக்களின் தோற்றமும் மறைவும் செப்டம்பர் 15ல் நடைபெற்றுள்ளதால் இந்நாள் பெருமை பெற்ற நாளாக விளங்குகின்றது. எனவே மறைந்தமலை அடிகளைப்பற்றி இதே நாளில் பிறந்த அறிஞர் அண்ணா கூறுவதை முதலில் நினைத்துப்பார்த்து மகிழ்வு கூறுவோமாக: அறிஞர் அண்ணா வாழ்த்தும் மறைமலை அடிகள் "மறைமலைஅடிகளாரின் மாண்பினை எண்ணும்தோறும் வியக்கத்தக்க மாண்பினை அவரோடு நெருங்கிப்பழகிய பலரும் எடுத்துரைத்திருக்கின்றார்கள். நான் அவரோடு அதிகம் நெருங்கிப் பழகியவன் அல்ல. அவரோடு எங்களுக்கு ஏற்பட்ட தொடர்பெல்லாம் இந்நாட்டில் முதலில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான் மறைமலையடிகளாரது புலமை, இந்தி எதிர்ப்புப் போராட்ட்த்தில் ஈடுபட்ட எங்களுக்கெல்லாம் பெரும் அரணாக அமைந்திருந்தது. இந்தி, தமிழகத்துக்குத் தே