Posts

Showing posts from September, 2009
Image
அருள்மொழி அரசு' திருமுருக கிருபானந்த வாரியார் வித்துவான் பெ.கு.பொன்னம்பலநாதன் First Published : 20 Sep 2009 01:29:00 AM IST Last Updated : "அருள்மொழி அரசு' என்றும் "திருப்புகழ் ஜோதி' என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட கிருபானந்த வாரியார், தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில் 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அவதரித்தார். செங்குந்த வீர சைவ மரபினர். தந்தை சிவத்திரு மல்லையதாசர்; இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். அன்னையார் கனகவல்லி அம்மையார்.வாரியாருக்கு மூன்று வயது முடிகின
கலித்தொகையில் வாழ்வியல் பண்புகள் முனைவர் இரா.இராமமூர்த்தி First Published : 20 Sep 2009 01:31:00 AM IST Last Updated : ""கல்வி வலார் கண்ட கலி'' எனப் பாராட்டப்படும் கலித்தொகையில் பல்வேறு வாழ்வியல் செய்திகள் இடம்பெற்றுள்ளன.""பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்'' என்பது பலராலும், பல நேரங்களிலும் எடுத்துரைக்கப்படுகிறது. இத்தொடர் எங்கிருந்து எடுத்தாளப்படுகிறது என்பதைப் பலர் அறிந்திருக்கலாம்; சிலர் அறியாமலும் இருக்கலாம். ஆயினும், இக் கருத்து, இன்று மிகப்பெரிய ""மக்கட் பண்பு என்று சொல்லப்படுவது -
அழகர் குறவஞ்சி காரை ஏ.சங்கரசேது First Published : 20 Sep 2009 01:34:00 AM IST Last Updated : நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழிசை - இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளில் குறவஞ்சி - இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக குறவஞ்சி நாடகங்கள் அனைத்தும் கதை அமைப்பில் ஒரே நிலையிலிருக்கும்.பாட்டுடைத்தலைவன், தலைவி மட்டும் வேறுபட்டிருப்பர். தலைவன் நாடெங்கும் பவனி வருதல், தலைவி அவனைக் கண்டு காதல் கொள்ளுதல், விரகமுற்ற தலைவி சந்திரனைப் பழித்தல், மன்மதனைப் பழித்தல், குறத்தி வருதல், தன் மலைவளம், நாட்டுவளம் கூறுதல், தலைவி தலைவன
Image
இந்த வாரம் கலாரசிகன் First Published : 20 Sep 2009 01:36:00 AM IST Last Updated : பிளாட் பாரத்தில் கண் தெரியாத கணவன், மனைவி, இரு குழந்தைகள் - உலகமே அந்தத் தம்பதியர்க்கு இருட்டு - அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர்கள் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்; அடுத்தவேளை அவர்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் யார் மூலம் என்ன கிடைக்கும் என்று எந்த நிச்சயமும் இல்லாத நிலையில்கூட!'"கருத்துக் குருடர்கள்' என்கிற தலைப்பில் ஹேமலதா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள "தூறல்கள்' என்கிற புத்தகத்தில் உள்ள ஒரு பதிவுதான் மேலே

Chiththirameazhi

Image
Reporting to the world on Tamil Affairs English | Deutsch | Français News 2009 September August July June May April March February January 2008 December November October September August July June May April March February January 2007 December November October September August July June May April March February January 2006 December November October September August July June May April March February January 2005 December November October September August July June May April March February January 2004 December November October September August July June May April March February January 2003 December November October September August July June May April March February January 2002 De
நச்சினார்க்கினியரின் உவமைத்திறன் வளவ.துரையன் First Published : 06 Sep 2009 01:39:00 AM IST Last Updated : தொ ல்காப்பியத்துக்கு உரை எழுதிய பெருமக்களில் நச்சினார்க்கினியர் குறிப்பிடத்தக்கவர். இவர் தொல்காப்பிய நூலில் உள்ள எழுத்ததிகாரம், பொருளதிகாரம் இரண்டுக்குமே உரை எழுதியுள்ளார். பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், செய்யுளியல் எனும் ஆறு இயல்களும் எழுதப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியரின் உரையானது இளம்பூரணர் உரைக்கும் பேராசிரியர் உரைக்கும் காலத்தால் பிற்பட்டதாகக் கருதப்படுகிறது. புலவர்கள் தாங்கள் கூறவந்த கருத்துகளைத் தெளிவாக விளக்குவதற்கு உவமைகளைக் கையாள்வது தொன்றுதொட்டு வரும் மரபாகும். பொருளதிகாரத்தில் நச்சினார்க்கினியர் பயன்படுத்தியுள்ள சில உவமைகள் இந்த உரையாசிரியரின் கற்பனை நயத்துக்கும், இவரது எழுத்து ஆளுமைக்கும் உவமையாக இருக்கிறது. நச்சினார்க்கினியர் பொருளதிகாரத்திற்கு அப்பெயர் ஏன் வந்தது என்பதை பின்வருமாறி விளக்குகிறார். அப்போது, "நாண்மீனின் பெயர், நாளிற்குப் பெயராகினாற் போல' என்ற உவமையைக் காட்டுகிறார்.
அழகுதான்! தமிழ்நாயகி First Published : 05 Sep 2009 08:23:00 PM IST Last Updated : ஒண்ணும் ஒண்ணும் அழகுதான் ஒவ்வொண்ணும் அழகுதான் மண்ணில் விதையும் முளைப்பதால் மண்ணும் கூட அழகுதான்! கண்ணில் பார்வை அழகுதான் கடலில் அலை அழகுதான் கன்னித் தமிழ் அழகுதான் கவிதை பாடல் அழகுதான்! விண்ணைத் தொடும் மரங்களோ விரிந்தக் காட்டிற்கு அழகுதான் வியக்கும் மனித நாவுக்கு உண்மை மட்டும் அழகுதான்! வண்ண நிலவு குளுமையில் வாழும் உலகம் அழகுதான் எண்ண எண்ண அழகுதான் எதுவும் மனதின் அழகுதான்!