அண்ணா | ||
தமிழ்த்தாய் பெற்றெடுத்த பிள்ளையே தமிழ் மக்களுக்காக வந்துதித்த கடவுளே வழிகாட்டி எமையிணைத்த அண்ணனே ஈழத்தை உயிராய் நினைத்த எம்தலைவனே ஈழம் மலருமுன் உன்னுயிர் போகுமா? சுதந்திரக்காற்றை சுவாசிக்காது போவாயா? மக்கள்துயர் துடைக்காது விட்டுப்பிரிவாயா? தீர்வு காணாமல் ஈழப்போர்தான் முடியுமா? கடவுளுக்கு வயதுண்டா? கடவுளுக்கு அழிவுண்டா? கடவுளுக்கு எமனுண்டா? எம்கடவுள் உனக்கு சாவுண்டா? மிருகவம்சப்பேய்கள் கத்துகின்றன! சாத்தானின் வாரிசுகள் ஆடகின்றன! உனையழித்து வென்றதென துள்ளுகின்றன! வரவிருக்கும் இழப்பைப்புரியாமல் கொண்டாடுகின்றன! நீ இருக்கிறாய் என்பதுதான் உண்மை உனையாறவிட்டு எழுவதே மக்களின் கடமை எதிர்காலத்தில் அழியும் எம்மவரின் வறுமை மறவோம் ஒன்றே எமது தலைமை "போராட்ட வடிவங்கள் மாறலாம் எனினும் இலட்சியம் மாறாது� என்ற உன் சிந்தனையை நாம் மறக்கவில்லை! எம்மிடம் தந்த இப்பணியை நாம் மறுக்கவில்லை! களத்தில் ஓய்வெடுக்க புலத்தில் நாம் எழுகிறோம்! உம்முடன் சேர்ந்து உம்பணியில் இணைகிறோம்! எதிரியின் வாயை அடக்க அயல் நாட்டின் வாயைப் பிழக்க தமிழரின் குரல் ஓங்கி ஒலிக்க உன்பேச்சை எதிர்பார்த்து நிற்கின்றோம்! ஆறதலைக்கேட்க உன்மக்கள் காத்திருப்போம்!!! வைசுணவி | ||
|
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்
அகரமுதல 18 9, வைகாசி 21, 2048 / சூன் 04 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக.. (பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 கவியரங்கக்கவிதை மயில்பொறியை வானத்தில் பறக்க வைத்தோம் மணிபல்லத் தீவிற்குப் பறந்து சென்றோம் குயில்மொழியாள் கண்ணகியை அழைத்துச் செல்லக் குன்றுக்கு வானஊர்தி வந்த தென்றே ‘ உயில் ‘போன்று நம்முன்னோர் எழுதி வைத்த உண்மைகளை அறிவியலின் அற்பு தத்தை பயில்கின்ற காப்பியத்தில் படித்த தெல்லாம் பார்தன்னில் நனவாகக் காணு கின்றோம் ! அணுப்பிளந்த செய்திதனை ஔவை சொன்னால் அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை என்று ரைத்தார் அணுக்குண்டைப் பொக்ரானில் வெடித்த போதோ அருந்தமிழன் அறிவுதனைப் போற்றி நின்றார் ! முணுமுணுத்தார் அம்புமுனை நெருப்பைக் கக்கி முன்னேறிச் சென்றதினைப் பொய்யே என்றார் முணுமுணுத்த வாய்பிளந்தே இசுகட் என்று முகிழ்த்தஏவு கணைகண்டு
Comments
Post a Comment