தலைநிமிர்ந்து நின்ற எங்கள் தமிழ்மக்கள் தமை அழித்த கொலைகாரன்

இராசபக்சே குலம் ஒருநாள் அழிந் தொழியும்

ஒருநாளில் கொன்றொழித்தான் உயர்ஈழத் தமிழர்களில்

இருபதாயிரம்பேரை இனப்பகைவன் இராசபக்சே

இருமூன்று மாதத்தில் ஒருலட்சம் தமிழர்களைக்

குறிவைத்துக் கொன்றழித்தான் கொடும்பாவி இராசபக்சே

கொத்தணியாம் குண்டுகளால் கொடியவனாம் இராசபக்சே

எத்தனையோ தமிழர்களை இல்லாமல் அழித்தானே.

வாழத் துடிக்கின்ற ஈழத் தமிழினத்தை

கோழை இராசபக்சே கொன்றழித்து விட்டானே

இட்லருக்கு அண்ணனாகி எங்கள்தமிழ் உறவுகளைக்

கொட்டடியில் அடைத்துவைத்துக் கொடுமைபல செய்கிறானே

மனிதநேயமில்லாத மாபாவி இராசபக்சே

தனிமையிலே நின்றழுது சாவான் உறுதியிது

அவன்சாகும் ஒருநாளில் ஐயோவென் றழுவதற்கு

எவன்வருவான் நாய்,நரியால் இழுபட்டுக் கிடப்பானே

உரிமைகேட்டு நின்றதமிழ் உறவுகளைக் கொன்றழித்த

சிறுமைசேர் இராசபக்சே சீரழிந்து சாவானே.

சீர்த்தமிழ்ப் பெண் குலத்தைச் சீரழித்த இராசபக்சே

சீரழிந்து தலைவெடித்துத் தெருவில்தான் கிடப்பானே

நெஞ்சம் எரியுதடா நினைக்கையிலே பதறுதடா

கொஞ்சமோ நீசெய்த கொடுமைகள் இராசபக்சே

எந்தமிழ் உறவுகளை இல்லாமல் கொன்றழிக்க

இந்தியா உடந்தையாக இருந்ததாம் உண்மைதானோ?

உண்மை அதுவானால் உயர்மானம் காக்கின்ற

திண்மைத் தமிழர்களே! சேர்ந்திடுவோம் ஓரணியில்

இனிமேலே நாங்கள் இந்தியர்கள் இல்லையென்று

துணிவுடனே கூட்டாகச் சொல்லிடுவோம் வாருங்கள்

நாம்தமிழர் நாம்தமிழர் நாம்தமிழர் என்றுரைப்போம்

ஆம் தமிழ் உறவுகளே அணிதிரள்வோம் வாருங்கள்!

- பேராசிரியர் அறிவரசன்

நன்றி: தென்செய்தி (16.08.2009)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue