பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்
அகரமுதல 18 9, வைகாசி 21, 2048 / சூன் 04 , 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக.. (பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 2/8 – தொடர்ச்சி) பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 கவியரங்கக்கவிதை மயில்பொறியை வானத்தில் பறக்க வைத்தோம் மணிபல்லத் தீவிற்குப் பறந்து சென்றோம் குயில்மொழியாள் கண்ணகியை அழைத்துச் செல்லக் குன்றுக்கு வானஊர்தி வந்த தென்றே ‘ உயில் ‘போன்று நம்முன்னோர் எழுதி வைத்த உண்மைகளை அறிவியலின் அற்பு தத்தை பயில்கின்ற காப்பியத்தில் படித்த தெல்லாம் பார்தன்னில் நனவாகக் காணு கின்றோம் ! அணுப்பிளந்த செய்திதனை ஔவை சொன்னால் அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை என்று ரைத்தார் அணுக்குண்டைப் பொக்ரானில் வெடித்த போதோ அருந்தமிழன் அறிவுதனைப் போற்றி நின்றார் ! முணுமுணுத்தார் அம்புமுனை நெருப்பைக் கக்கி முன்னேறிச் சென்றதினைப் பொய்யே என்றார் முணுமுணுத்த வாய்பிளந்தே இசுகட் என்று முகிழ்த்தஏவு கணைகண்டு
பண்பாடற்ற பாலைவனத்தை உருவாக்குவதில் நாம பங்கேற்க வேண்டா என்னும் உறுதியை இப் படைப்பைப் படைப்போருக்கு ஏற்படுகிறது.'இன்று நினைத்தால் கோயிலை அல்ல - ஒரு தூணைக் கூட நம்மால் படைக்க முடியாது' என்னும் பொன்மொழியை நாம் உள்ளத்தில் நன்கு பதித்துக் கொள்ள வேண்டும். 'இந்தச் சிற்பங்களை மனத்தால்கூடக் காயப்படுத்த உரிமையில்லை' என்பது என்றென்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். கோயில்களுக்கோ பிற சுற்றுலா இடங்களுக்கோ செல்லும் பொழுது விளம்பரக் கிறுக்கல் கல்வெட்டாளராகவோ ஓவியராகவோ நாமும் மாறாமல் அத்தகையோரையும் தடுத்து நிறுத்த வேண்டும். முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் காலத்தின் தேவையறிந்து அருமையான கருத்தை அழகாகக் கூறியுள்ளார்கள்.
ReplyDelete