நல்வழி
தினமணி


ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பர் - ஓவாமல் ஐயம்புகு வாரை யாரே விலக்குவார் மெய்அம் புவியதன் மேல். (பா-13)அழகிய இம்மண்ணுலகின் மீது உண்மையாக வாழ்கின்றவரை அழித்திட எவருமே இல்லை. அதைத் தவிர, இறக்கக் கூடியவரை இறவாமல் தடுத்து நிறுத்தக் கூடியவர் எவரும் இல்லை. ஓய்வின்றி பிச்சையெடுக்கச் செல்பவரை, பிச்சையெடுக்காமல் தடுப்பவரும் யாருமில்லை. எனவே, வினைப்பயனால் ஏற்படும் இன்ப, துன்பங்களை எவராலும் தடுக்க முடியாது.

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue