கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 24 April 2024 அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை – தொடர்ச்சி ) பூங்கொடி நாவலரின் முன்னை நிகழ்ச்சி யான்புரி அலுவலில் ஏன்விலக் குற்றேன்? மீன்புலி கயலால் மேம்படு தமிழக விடுதலை குறித்து விளிம்பினேன்; தமிழ்மொழி 50 கெடுதலை இன்றிக் கிளந்தெழப் புகன்றேன், இவையே யான்செய் தவறென இயம்பி, நவைஎனப் பழிஎன நாணார் விலக்கினர்; நாவலர் ஊக்கமூட்டல் மதுப்பூங் குழலி! `மாநிலத் தித்துயர் பொதுப்பணி புரிவோர்க்குப் புதுவ தன்றே! 55 விதுப்புறேல் நின்பணி வீறுற் றோங்கும்' என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள்; `நன்றுநன் றைய! நான்அய ரேன்இப் பணியே உயிராப் பாரில் கொண்டுளேன்; உலகியல் நிலைமை உலக மாந்தர் நிலைதான் என்னே! 60 நிலையிலாக் கொள்கை, நேர்மை இன்மை கலையெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள் பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்; மறுநாள் மாறி `மதியே இல்லார், சிறியார்’ எனப்பழி செப்புவர் அந்தோ! 65 தொண்டர்தம் பெருமை நல்லன செயலே நாளும் ஆற்றும் வல்லமை பூண்டு வழுவிலாக் குறள்நெறி பரப்பிக் கடவுட் பள்ளியில் பைந்தமிழ் சிறக்கப் பணிபுரி சீரியோர் மலையு